வெள்ளி, 2 மே, 2014

அக்ஷய திருதியையில் தங்கம் வாங்கினால் கான்சர் வரும் ?

அட்சய திருதியை முன்னிட்டு, சென்னையில் உள்ள நகைக் கடைகளில் திருவிழா போல் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிகாலை முதல் நள்ளிரவு வரை நகைக்கடைகள் திறந்து இருந்த காரணத்தால் விடிய விடிய மக்கள் நகை வாங்கிக் சென்றனர். அட்சயா என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாது என்பது அர்த்தம். மேலும், இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நாளை தீபாவளி, தை பொங்கலைப்போல இதை ஒரு பண்டிகையாக கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் பொதுமக்கள்.
tamil.oneindia.in
மூட நம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லை. மார்வாடிகளும் மலையாளிகளும் இந்த அக்ஷய திருதியை என்ற மிகப்பெரிய ஹம்பக்கை தமிழ்நாட்டில் விதைத்து விட்டனர், சென்ற ஆண்டு லலிதா ஜுவலறி உரிமையாளர்கள் இந்த அக்ஷய திருதியை என்ற மூட நம்பிக்கையை பற்றி முழுபக்க விளம்பரம் கொடுத்திருந்தனர். யார் என்ன சொன்னாலும் மூட நம்பிக்கையில் இருந்து தமிழ் மகா ஜனங்களை மீட்கவே முடியாது, அக்ஷய திருதியையில் தங்கம் வாங்கினால் கான்சர் வரும் என்று யாராவது பிராசாரம் பண்ணுங்களேன் ,

கருத்துகள் இல்லை: