வியாழன், 1 மே, 2014

பா.ஜ., மத்தியில் ஆட்சி அமைத்தால் அமெரிக்கா அணுகுமுறை மாறும் ?

புதுடில்லி:புதுடில்லி: மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைத்தால், அமெரிக்கா அணுகுமுறை மாறும் என அந்நாடு கூறியுள்ளது.அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி, ஸ்டீபன் சோகேன் கூறியதாவது:பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் கொள்கைகளை பார்க்கும்போது, லோக்சபா தேர்தலுக்கு பின், இந்தியாவில் பெரிய அளவில் மாற்றம் வரும் என, தெரிகிறது. குறிப்பாக, இந்தியாவின் பொருளாதாரத்தில், மோடி, மாற்றத்தை ஏற்படுத்தலாம். அந்த நாட்டின் வெளியுறவு கொள்கையிலும், அது, எதிரொலிக்கலாம்.மோடி தலைமையிலான ஆட்சி அமைவதில், சில இடையூறு இருந்தாலும், சாதகமான அம்சங்களும் உள்ளன.எனவே, இந்தியாவில்,பா.ஜ., ஆட்சி அமைந்தால், அந்த நாட்டுடனான, அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையின் அணுகுமுறையும் மாறும்.இவ்வாறு, அவர் கூறினார்  dinamalar.com யார் ஆட்சிக்கு வந்தாலும் அமெரிக்காவுக்கான இந்தியாவின் அடிமைத்தனம் மாறபோவதில்லை , காங்கிரஸ் பின்பற்றிய அதே கொள்கையைத்தான் பிஜேபி யும் பின்பற்றும் , இதில் என்ன பெரிய மாற்றம் வரபோகிறது . முடிந்தால் இந்திய - அமெரிக்க அணுசக்தி கொள்கை உடன்பாட்டை முறிக்க முடியுமா ? ஏனென்றால் பிஜேபி தான் இதற்கு பெரிய எதிர்ப்பை காட்டினார்களே ?

கருத்துகள் இல்லை: