புதன், 30 ஏப்ரல், 2014

அகிலேஷ் யாதவ்: 3வது அணி ஆட்சி அமைத்தால் முலாயம் சிங் யாதவ் தான் பிரதமர் ???


தேர்தலுக்கு பின்னர் மத்தியில் 3வது அணி ஆட்சி அமைத்தால் முலாயம் சிங் யாதவ் தான் பிரதமர் என்று அவரது மகனும், உத்திரப்பிரதேச முதல் அமைச்சருமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ்,
மத்தியில் 3வது அணி ஆட்சி அமைத்தால் முலாயம் சிங் யாதவ் தான் பிரதமர். பலமுறை முதல் அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும், மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ள முலாயம் சிங், நரேந்திர மோடியை விட அதிக அனுபவம் உள்ளவர். உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் ன்றார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: