வெள்ளி, 4 நவம்பர், 2011

ஆட்ட நிர்ணய சதி: பாகிஸ்தான் வீரர்களுக்கு சிறை!

கடந்த வருடம் நடைபெற்ற இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிகெட் போட்டியில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கு இன்று லண்டன் சவுத் கிரவுன் வோர்க் நீதிமன்றில் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சல்மான் பட்டுக்கு ஆறு மாத சிறை தண்டணையும், வேகப்பந்து வீச்சாளர் முஹமட் ஆசிப்பிற்கு ஒருவருட சிறை தண்டணையும் விதிக்கப்பட்டுள்ளது
அத்துடன் வேகப் பந்து வீச்சாளர் மொஹமட் அமருக்கு ஆறு மாத கால சிறைத் தண்டணையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆட்ட நிர்ணய சதியில் தரகராக செயற்பட்ட மசார் மஜீட் என்பவருக்கு இரண்டு வருடங்களும், எட்டு மாத சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: