புதன், 8 ஜூன், 2011

கேரளாவில் இருந்து அவுஸ்த்ரேலியா செல்ல இருந்த 11 இலங்கையர் கைது


கொச்சி: கொச்சியில் இருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த இலங்கையைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொச்சியில் உள்ள ஒரு லாட்ஜில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சட்டவிரோதமாக வேறு நாட்டுக்கு செல்ல திட்டமிடலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்த லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தி 2 குழந்தைகள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை கடத்தல் கும்பல் ஒன்று சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கவிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த மே மாதம் கொல்லத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு லாட்ஜில் தங்கியிருந்த 39 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்ததில் உள்ளூர் ஏஜெண்ட் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: