ஞாயிறு, 5 ஜூன், 2011

தோற்றது....சமச்சீர் கல்வித் திட்டம்.-,கலைஞர் காப்பீட்டுத்திட்டம்

தோற்றது மக்கள் என்று சொல்லமாட்டேன் : பரிதி

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் கலைஞர், தனது சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
இதையடுத்து தொகுதி மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காக திருவாரூரில் திமுக சார்பில் வாக்களார்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் இன்று இரவு (5.6.2011) நடைபெற்றது.
கலைஞர் தலைமையேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பரிதி இளம்வழுதி பேசினார்.
அவர்,’தலைவரை வெற்றி பெற வைத்ததற்காக திருவாரூர் மக்களின் கால்களைத்தொட்டு வணங்கி நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
இந்த தேர்தலில் தோற்றது மக்கள் என்று சொல்லமாட்டேன்.இந்த தேர்தலில் தோற்றது மக்கள் என்று சொல்லமாட்டேன். தோற்றது கலைஞர் காப்பீட்டுத்திட்டம்.தோற்றது....சமச்சீர் கல்வித் திட்டம்.
தேர்தல் முடிவு வந்த போது, மக்கள் எனக்கு ஓய்வு அளித்திருக்கிறார்கள் என்று தலைவர் சொன்னார்.
ஆனால் தலைவருக்கு என்றுமே ஓய்வு இல்லைஅவர் ஒரு பேச்சுக்காகத்தான் அப்படிச்சொன்னார்.

நெஞ்சுக்கு நீதியில் தலைவர், என் ஓய்வு என்பது கல்லறையில்தான்.. என எழுதியிருக்கிறார்’’ என்று

கருத்துகள் இல்லை: