சனி, 11 ஜூன், 2011

யாழில் பிள்ளைகளினால் கைவிடப்படும் முதுமையான பெற்றோர்கள் அதிகரிப்பு

யாழ். குடா நாட்டில் பிள்ளைகளினால் கைவிடப்படும் முதியவர்களின் தொகை யுத்ததிற்குப் பின்னரான காலப் பகுதியில் அதிகரித்தச் செல்வதாக கைதடி முதியோர் பாராமரிப்பு நிலைய நிருவாகம் தெரிவித்துள்ளது.

முதியவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், போசாக்கான உணவு என்பவற்றை அவர்களுக்கு கொடுப்பதற்கு அவர்களின் பிள்ளைகள் தவறியுள்ளனர் எனவும் முதுமையான காலத்தில் அவர்கள் முதியோர் இல்லங்களில் ஒப்படைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதிகரித்த வேலைப்பளு மற்றும் சுயகௌரவம் என்பவற்றை அடிப்படையாக வைத்து பிள்ளைகள் தமது முதுமையான பெற்றோர்களை பராமரிக்க தவறியுள்ளதாகவும் அதனால் அவர்களைப் பராமரிப்பதற்கு முதியோர் இல்லங்களை நாடுவதாகவும் கைதடி முதியோர் பராமரிப்பு நிலைய நிர்வாகத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: