செவ்வாய், 7 ஜூன், 2011

பிரிவினைவாதம் பேசுவோர் தமிழ் மக்களை அடகுவைத்து வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை

mahinda-rajapaksa-050511
    * தமிழர்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வை அரசு வழங்கும்
    * வடபகுதி மக்களின் மனம் திருப்தி பெறும் வரை சேவை தொடரும்
    * கொக்காவில் கோபுரம் போல் தமிழ் மக்கள் வாழ்வை உயர்த்துவோம்
எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் புலிகள் கேட்டதை நாங்கள் வழங்கப் போவதில்லை. தமிழ் மக்களுக்கு எது தேவையோ அதனைக் கருத்திற்கொண்டு அரசியல் தீர்வொன்றை வழங்குவோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கொக்காவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு கோபுரத்தை நேற்றுத் திறந்து வைத்த பின்னர் அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சில தலைவர்கள் தமிழ் மக்களை தவறான பாதையில் கொண்டு செல்ல முற்படுகிறார்கள். தமிழ் மக்களாகிய நீங்கள் அந்த வலையில் சிக்க வேண்டாம்.

வடக்குக்கு தொலைத்தொடர்பு மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றுக்கான மிக உயரமான கோபுரம் ஒன்று இன்று திறந்து வைக்கப்படுகிறது. இந்த கோபுரத்தைப் போன்றே உங்கள் வாழ்க்கையையும் நாங்கள் உயர்த்துவோம்.

நீங்கள் போதும் போதும் என்று சொல்லுகின்ற அளவுக்கு உங்களுக்கு அபிவிருத்தி, வாழ்வாதார உதவிகளை வழங்குவோம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உங்களது தேவைகள் எல்லாவற்றையும் எனக்கு அடிக்கடி கூறிவருகிறார். கல்வி, சுகாதாரம், மீன்பிடி, விவசாயம் உள்ளிட்ட உங்கள் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவோம்.

இதற்காகவே கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்தி உங்கள் தேவைகள் பற்றி விசேடமாக ஆராய்ந்தோம். அன்று நாம் அடையாளம் கண்டுகொண்டவற்றை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்.

கிளிநொச்சியில் விவசாயம் மற்றும் பொறியியல் பீடங்களை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். பல்கலைக்கழகத்தின் முன்னோடித் திட்டமாக விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும்.

உங்களது உட்கட்டமைப்பு வசதிகள் மின்சாரம், தண்ணீர் போன்ற முக்கிய தேவைகள் விரைவாக செய்துதரப்படும்.

வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் பாடசாலை மாணவர்கள் அலரிமாளிகைக்கு வருகிறார்கள். அவர்கள் இரு சாராரும் உரையாடுவதை நான் நேரில் அவதானித்திருக்கிறேன்.

நாம் எதிர்பார்த்த வடக்கு தெற்கு உறவு ஏற்பட்டு வருவதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

பிச்சைக்காரர்களின் புண் போன்று சில அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்னெடுக்க முயற்சிக்கிறார்கள். புலிகள் கேட்டதைப் போன்றே சில அரசியல்வாதிகளும் கேட்கிறார்கள். எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்வோம். வடக்கு தெற்குத் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். வெளிநாட்டு சக்திகள் தேவையில்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, கெஹலிய ரம்புக்வெல்ல, ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. கனேகல, தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனுர பெல்பிட்ட, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ். அரச அதிபர்கள் உட்பட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை: