சனி, 30 அக்டோபர், 2010

Facebook பேஸ்புக் பார்ப்பதால் ஊழியர்களுக்கு உற்சாகம் பிறக்கிறது

அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர்கள் அனைவரும் எந்நேரமும் கம்ப்யூட்டரை பார்த்து கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அச்சமயத்தில் அவர்களின் மனதில் ஒரு வித இறுக்கம் தோன்றுகிறது. இதனை தவிர்ப்பதற்காக பல்வேறு காலகட்டங்களில் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு உத்திகளை கூறியுள்ளனர். உதாரணமாக ஒரு மணிக்கு ஒரு தடவை ஐந்து நிமிடம் கம்ப்யூட்டரை பார்ப்பதை தவிர்த்தால் மூளை சுறுசுறுப்படையும் என தெரிவிக்கின்றனர். தற்போதைய காலகட்டத்தில் பேஸ் புக், ட்விட்டர், யூடியூப் போன்ற இணையதளங்களை ஊழியர்கள் பார்ப்பதால் அவர்களின் வேலை சுறுசுறுப்பாக உள்ளது எனஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலை கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பெரிண்ட் கோகர் தெரிவித்துள்ளார். இதற்காக 300 ஊழியர்களிடம் அவர் ஆய்வை நடத்தினார், அதில் 20 சதவீதம் பேர் மேற்கண்ட இணையதளங்களை காண்பதாகவும், அதனால் பணிச்சுமையால் ஏற்படும் சோர்வில் இருந்து விடுபட்டு உற்சாகம் அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: