வியாழன், 28 அக்டோபர், 2010

இராணுவப் படையணிகள் தமிழ்மக்களுக்காக 1700 வீடுகளை அமைத்து வழங்கியுள்ளனர்..!

வன்னி பாதுகாப்பு தலைமையகத்தின்கீழ் இயங்கும் இராணுவப் படையணிகள் தமிழ்மக்களுக்காக 1700 வீடுகளை அமைத்து அதனை வழங்கியுள்ளனர். வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு இந்த வீடுகள் கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளன. வன்னி கட்டளைத்தளபதி மேஜர்ஜெனரல் கமல் குணரத்னவின் வழிநடத்தலின்கீழ் இராணுவவள மற்றும் மனிதவளத்தின் ஒத்துழைப்போடு இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. வீடுகளைப் பெறும் பயனாளிகளில் கொல்லப்பட்ட புலிகளின் உறவினர்களும் அடங்குகின்றனர். இவர்கள் இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். மீள்குடியேற்றத்தின்போது வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள முடியாத குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு இந்த வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளதாக கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: