வெள்ளி, 29 அக்டோபர், 2010

குறும்பு செய்யும் குழந்தைக்கு எறும்புக்கடி : தனியார் பள்ளிகள் குரூரம்

கோவையில் உள்ள சில தனியார் மெட்ரிக் பள்ளிகள், தங்கள் மாணவர்களை வழிக்கு கொண்டு வர, காட்டுமிராண்டித்தனமான வழிமுறைகளை கடைபிடிக்கின்றன. இதன் உச்சகட்டமாக, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகம், குறும்பு செய்யும் குழந்தைகளை மரத்தில் கட்டி போட்டும், எறும்பால் கடிக்கச் செய்தும், தண்டித்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மாணவர்களை அடிப்பது, உடல் ரீதியாக துன்புறுத்துவது, தகாத வார்த்தைகளால் திட்டுவது ஆகியவை, நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் உள்ள சில தனியார் பள்ளி ஆசிரியர்கள், இதுகுறித்து கவலைப்படுவதே இல்லை. இவர்கள், மாணவர்களுக்கு அளிக்கும் தண்டனைகள் விபரீதமானவை. மணிக்கணக்காக வெயிலில் நிற்க வைப்பது, ஸ்டீல் ஸ்கேலால் கை, கால் முட்டி, தலையில் அடிப்பது என தண்டனைகளின் பட்டியல் நீள்கிறது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பிரபல தனியார் துவக்கப் பள்ளி அளிக்கும் தண்டனை கொடூரத்தின் உச்சகட்டமாக உள்ளது. மாணவர்களை வழிக்கு கொண்டு வர, இப்பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்தும் யுக்திகள் பதற வைக்கின்றன. சரியாக படிக்காத, குறும்பு செய்யும் சிறு குழந்தைகளுக்கு இப்பள்ளி ஆசிரியர்கள் அளிக்கும் தண்டனை தான் "எறும்புக்கடி!' சொல்படி கேட்காத சிறு குழந்தைகளை, இங்குள்ள ஒரு சிறு மரத்தில், கயிற்றால் கட்டிப் போட்டு விடுகின்றனர். மரத்தின் அடிப்பகுதியில் உள்ள சிவப்பு எறும்புகளின் கடி தாங்காமல் குழந்தைகள், கால்களை மாற்றி, மாற்றி வதைபட்டு கதறுவதை பார்க்கும் பிற குழந்தைகள், மனதளவில் மிரண்டு விடுகின்றனர்.

இதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவர் கூறுகையில், "சினிமாவில் கூட இதுபோன்ற கொடுமையை பார்க்க முடியாது. சிறிது நேரத்தில் கட்டுகள் அவிழ்த்து விடப்படும் மாணவனுக்கு, கடும் எச்சரிக்கை விடுக்கின்றனர். பெற்றோரிடம் சொன்னால், "டிசி' கொடுத்து அனுப்பி விடுவதாக மிரட்டுகின்றனர். மிரட்டலால் மிரண்டு போகும் குழந்தைகள், இதுகுறித்து பெற்றோரிடம் மூச்சு விடுவதில்லை. வேறு வழியில்லாமல் இங்கு வேலை செய்கிறோம்' என்றார். பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற விதிமுறை இருந்தும், பெரும்பாலான பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் இல்லை. இதனால், இதுபோன்ற தண்டனைகள் குறித்து பெற்றோர் கூட்டாக கேள்வி எழுப்ப முடிவதில்லை. தனியார் பள்ளிகளில் பணிபுரியும் பல ஆசிரியர்கள், முறையான ஆசிரியர் பயிற்சி முடிக்காத பட்டதாரிகள். இதனால், ஆசிரியர் பயிற்சியின் போது கற்றுத் தரப்படும், "சைல்டு சைக்காலஜி' குறித்தெல்லாம் இவர்களுக்கு தெரிவதில்லை. ஆசிரியர் பயிற்சி பெறாதவர்களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகமோ, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களோ கண்டு கொள்வதில்லை என்பதே பெற்றோரின் குற்றச்சாட்டு.
kumaravel - mysore,இந்தியா
2010-10-29 17:52:03 IST
the above news is a shocking one.whether we are liviing in a civilized world. the whole blame goes to parents .they think just put the kid in a so called reputed schools paying thro their nose,they think they had done their job.they never follow up.with the kids and never discuss with them what problem they are facing in the school,what type of teachers they have.the ladies spend their time watching t.v.serials and gents spend their time in bars. the kids left to their own ,suffering...
2010-10-29 17:34:07 IST
Highly ridiculous -. the school should be ashamed for doing this to the innocent children . I request Tamil Nadu Government to take immediate steps to stop this nonsence and to reveal the name of the school following this practice....
கண்ணன் நாராயணசாமி - ஆலமரத்துப்பட்டி...சிவகாசி,இந்தியா
2010-10-29 16:55:27 IST
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகம், police should register a complaint take action against school. குழந்தைகளிடம் அன்பு காட்டுங்கள் ப்ளீஸ்...
Raja - uk,இந்தியா
2010-10-29 16:19:39 IST
these kids are not animals. I have come across many idiots like this as my teachers. Raja...
அருண் Gulf - Gulf,இந்தியா
2010-10-29 16:05:48 IST
மிக்க நன்றி தினமலர் . நல்ல சேவை செய்கிறிர்கள் ....
augustin - Chennai,இந்தியா
2010-10-29 16:04:46 IST
Is it true? It might be a single incident. Why should a teacher take such a big risk? Who is the benificiery?...
ராம் - chicago,இந்தியா
2010-10-29 15:57:40 IST
வெட்கம் கெட்ட இந்திய வில் மட்டும் இது போன்ற சய்திகள் , ஒரு பள்ளி என்று எழுததிர்கள் பள்ளி இன் பெயர் ரய் வலிய்டவும்...
said mohamed - coimbatore,இந்தியா
2010-10-29 15:48:43 IST
what is this ,all of u thing goverment empoly u make dutty corrctly...
Sangeetha - chennai,இந்தியா
2010-10-29 15:47:44 IST
ஐயோ! பாவம் அந்த குழந்தைகள்! பொறுமை அற்ற ஆசரியர்கள். அடிப்பதும், தண்டிப்பதும் சுலபம், அதனால் இது எல்லோராலும் வரவேற்க படுகிறது. குழந்தைகளை சமாளிக்கும் திறமை, அவர்களை புரிந்துகொள்ளும் அறிவு ஆசிரியர், பெற்றோர் இருவருக்கும் குறைவு. எந்த பெற்றோர் தன் குழந்தயை அடிக்காமல் வளர்கிறார்கள்? அங்கே ஆரம்பிகிறது அடிப்பது சரி என்னும் எண்ணம். அதனால் பெற்றோர்களே தயவு செய்து உங்கள் குழந்தைகளை அடிக்காதீர்கள். நாளய சமுதாயம் நல்ல திறமையுள்ள சமுதாயமாக வல்லாரும். Please parents learn to handle kids without slapping and beating...
கணேஷ் - மாலத்தீவுகள்,மாலத்தீவு
2010-10-29 15:29:05 IST
""எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிரக்கைய்லே"" அவை நல்லவராவதும், தீயவராவதும், அன்னை வளர்ப்பதிலே.... """அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்""".........
c.ramasamy - tup,இந்தியா
2010-10-29 15:12:05 IST
இந்த மாதிரி கொடுமை பண்ணுவதற்கு..பேசாம டிசி..குடுத்து அனுப்சரவேண்டியதுதானே....ii...
Manimegalai Sureshkumar - Karaikudi,இந்தியா
2010-10-29 14:51:50 IST
அந்த பள்ளி யின் அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்ய பட வேண்டும்....
பவுல்raj - Singapore,சிங்கப்பூர்
2010-10-29 14:49:44 IST
கோயம்புத்தூர் வாசகர் சொல்வது சரி தான். பள்ளியின் பெயரை வெளியிடுங்கள். அப்பொழுது தான் மற்ற பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும்....
த.கர்ணன் - சென்னை,இந்தியா
2010-10-29 14:32:16 IST
இது சிஸ்டம் failure அரசு இயந்திரத்தின் சிஸ்டம் சரிசெய்யப்பட வேண்டும்....
siva - Bangalore,இந்தியா
2010-10-29 14:31:12 IST
இந்த செய்தியை படிக்கும் போதே அதிர்ச்சியாக இருக்கிறது. இது போன்ற தண்டனைகள் குழந்தைகள் மனதில் ஒரு வன்மத்தை ஏற்படுத்தி விட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. வருத்தமாக இருக்கிறது....
முத்து siva - Bangalore,இந்தியா
2010-10-29 14:25:09 IST
Congratues to தினமலர் , first எல்லா பாரேன்ட்சம் ஒண்ட பேசி நல்ல mudivu எடுக்க வேண்டும்...
KALPANA - coimbatore,இந்தியா
2010-10-29 14:21:20 IST
கொடுமையான இந்த செயல்களை செய்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . பெற்றோர் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளை அவ்வப்போது சென்று பார்க்க வேண்டும் . பெற்றோரே விழித்திடுங்கள் ....
சத்யா - சென்னை,இந்தியா
2010-10-29 13:50:53 IST
பனிஷ்மென்ட் என்ற பெயரில் குழந்தைகளை துன்புறுத்தும் அடாவடி டீச்சர்களை பெற்றோர்கள் உதைத்தால்தான் அவர்களுக்கு புத்தி வரும். செய்வார்களா?...
பிரபு - நியூஜெர்சி,இந்தியா
2010-10-29 13:39:18 IST
இது போன்று செய்பவர்களை மன நல காப்பகத்தில் சேர்த்துவிட வேணும். ஏன் பிள்ளை படிக்கும் பள்ளி, பெற்றோறரை பள்ளிக்கு வர அனுமதி மறுக்கிறது. ஏன் என்று புரியவில்லை ?...
சிதம்பரம். Ct - Kabul,ஆப்கானிஸ்தான்
2010-10-29 13:31:34 IST
இது போன்ற அசுரப் பள்ளிகளின் முகத்திரையை கிழிக்க வேண்டும். கோவையில் உள்ள நல்ல உள்ளம் கொண்ட வழக்கறிஞர் யாராவது பொதுநல வழக்கு தொடரலாம். அல்லது தினமலர் செய்தியை அடிபடையாக கொண்டு " தன் சுய வழக்காக" (Suo Motto ) ஏதாவதொரு நீதிபதி எடுத்துக்கொண்டு விசாரணைக்கும் தகுந்த நடவடிக்கைக்கும் உத்தரவிட வேண்டும்...
பஹீமின் தந்தை இ.ஹ.மைந்தன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-29 13:13:55 IST
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில என்பார்கள். கோவை தனியார் பள்ளிகளின் செய்கை குழந்தைகளின் வாழ்வில் திண்டாத்தத்தை ஏற்படுத்திவிடும். அன்பு ஒன்றுதான் குழந்தைகள் கொண்டாத்தத்தை ஏற்படுத்தும் என்பதை அந்த அறிவிலிகள் உணர வேண்டும்....
சு. ராகவன் - chennai,இந்தியா
2010-10-29 12:59:14 IST
இது போன்ற பள்ளிகளின் லைசென்சை கான்செல் செய்வதோடு குற்றம் புரிந்த ஆசிரியருக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும். பெற்றோர்களே!, உங்கள் கவனத்திற்கு !, தினமும் பள்ளி முடிந்து வரும் உங்கள் குழந்தைகளை, அன்றைக்கு பள்ளியில் நடந்த விஷயங்களை கேட்டு அறிவதனால் உங்கள் குழந்தைக்கு நடக்கும் இது போன்ற அக்கரமங்களை தட்டி கேட்க இயலும். இப்படிக்கு, சு. ராகவன்....
கருத்து நய்யாண்டி.. - துபாய்குறுக்குதெரு,இந்தியா
2010-10-29 12:44:04 IST
கல்வி தொழிலின் போட்டி,மற்றும் பொறாமையால் எவனோ ஒரு பயபுள்ள கிளப்பிவிடுகிற பொரளியாக இருக்கும்.இப்படி யாராவது செய்வார்களா?... அதை நம்ம புரிந்து கொள்ள வேண்டும்.ஒரு ஆசிரியர் சொல்கிறார் என்று இது எல்லாம் உண்மை என்று எப்படி நம்புவது. இந்த ஆசிரியையும் ஒரு உதாரணம் கொடுக்கிறது,அதவும் இந்த கோமாளி தொழில் சினிமாவில் கூட இப்படி செய்வதில்லை என்று.இந்த ஆசிரியை ஒரு சினிமா பைதியகாரியாக பொம்பளையாக இருக்கும் போல் தெருகிறது....

கருத்துகள் இல்லை: