புதன், 27 அக்டோபர், 2010

அனுஷ்கா மறுப்பு லாரன்ஸ் திகைப்பு

 

       ‘முனி’ போன்ற இன்னொரு மிரட்டலான திகில் படமாக ‘காஞ்சனா’ வை உருவாக்கப்போகிறார் ராகவா லாரன்ஸ்.  இதற்கான பணிகளில் மாத கணக்காக தீவிரமாக ஈடுபட்டு வந்த லாரன்ஸ்,  முதல் கட்டப் பணிகள் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் படப்பிடிப்பை தொடங்க தயாராகிவிட்டாராம்.



முனி படத்தில் நடித்த கோவை சரளா இதிலும் நடிக்கவிருக்கிறாராம்.  இதில் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்திகள் திரைவட்டாரத்தில் ஏற்கனவே பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அனுஷ்கா நடிக்க மாட்டார் என்ற தகவல்களும் இப்போது வெளியாகியுள்ளன.   
அருந்ததி’ படத்தில் அனுஷ்காவின் அதிரடி நடிப்பில் அசந்து போன லாரன்ஸ் தனது ‘காஞ்சனா’ அனுஷ்காதான் என திடமாக நினைத்திருந்தார்.  இதற்காக அனுஷ்காவிடமும் பலமுறை பேச்சுவார்த்தையும் நடத்தினாராம் லாரன்ஸ். 

ஆனால், என்ன காரணத்தினாலோ இது போன்ற திகில் கதாபாத்திரத்தில் இனியும் நடிக்க மாட்டேன் என மறுத்துவிட்டாராம் அனுஷ்கா..  

பலமுறை கேட்டுப்பார்த்தும் பலன் இல்லாமல் போக, உடனடியாக லட்சுமி ராயை ‘காஞ்சனா’வில் நடிக்க வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் லாரன்ஸ்.இனி லாரன்சின் காஞ்சனா ‘லட்சுமி ராய்’தான் என்ற நம்பகமான தகவல்கள் லாரன்ஸ் வட்டாரத்தில் இருந்தே கிடைத்துள்ளன.

‘முனி’ மாதிரியான திகில் படம்தான் காஞ்சனா என்றாலும், முனியை விட முற்றிலும் மாறுபட்ட, அதைவிட மிரட்டலான படமாக ‘காஞ்சனா’ இருக்கும் என கூறும் லாரன்ஸ், இந்தப் படத்தை மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட்டாக்கும் லட்சியத்துடன் தீவிரமாக செயல்பட்டுவருகிறாராம்.

‘லாரன்ஸின் லட்சிய வெற்றிக்கு லட்சுமி ராய் லாயக்கானவர்தான்’ என படம் வெளிவந்த பிறகு அனைவரும் பாராட்டுவார்கள் என்று நம்பிக்கையோடு கூறிவருகிறது காஞ்சனா தரப்பு. 

கருத்துகள் இல்லை: