வெள்ளி, 29 அக்டோபர், 2010

லண்டனில் தமிழ்ப் பெண்ணொருவர் கொலைக்குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்



லண்டன் தமிழ்ப் பெண்ணொருவர் நபரொருவரை சுரங்க ரயில் பாதையில் தள்ளிவிட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். 34 வயதான நினா கனகசிங்கம் என்பவரே குறித்த தமிழ்ப் பெண்ணாவார்.
கடந்த திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
63 வயதான ஆணொருவர் பெண்களின் ஆடைகளை அணிந்திருந்த நிலையில் நினா அவரைப் பிடித்து தள்ளி விட்டதில் அவர் டியூப் ரயிலில் அடிபட்டு மரணத்தைத் தழுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரணித்தவரின் சடலத்தை ரயில் பாதையிலிருந்து எடுப்பதற்காக கடந்த திங்கட்கிழமை சன நெரிசலான மாலை நேரத்தில் கிங்ஸ் குரோஸ் ரயில்வே ஸ்டேசன் மற்றும் பிக்காடில்லி ரயில் பாதை என்பன தற்காலிகமாக மூடப்பட்டதாக லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான பெண் சிட்டி ஒப் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: