சனி, 30 அக்டோபர், 2010

நமீதா - அஞ்சலிக்கு நடந்த கதி! நடிகைகள் புது முடிவு!!

Actress Namitha, Anjali`s new planகரூரில் நடந் தஒரு விழாவில் பங்கேற்க சென்ற நடிகை நமீதாவை திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் கடத்த நடந்த முயற்சி, நடிகை அஞ்சலி கன்னியாகுமரி மாவட்டத்தில் தம்பி வெட்டோத்தி சுந்தரம் சூட்டிங்கில் இருந்தபோது நடந்த தாக்குதல்... போன்ற சம்பவங்களால் வெலவெலத்துப் போயிருக்கின்றனராம் நம் நடிகைகள். இந்த சம்பவங்களுக்கு பிறகு வெளியூர் சூட்டிங் என்றாலே தயக்கம் காட்டும் அளவுக்கு அம்மணிகள் பயந்துபோய் இருக்கிறார்கள். அதேநேரம் பயந்தால் ஒண்ணுமே நடக்காது என கருதிய சில நட்சத்திரங்கள், இனி வெளியூர் சூட்டிங், நடிகர் - நடிகைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என்றாலே போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என காவல்துறையை சந்திக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள். நமீதா, அஞ்சலி உள்ளிட்ட இன்னும் சில நடிகர்- நடிகைகளுக்கோ காவல்துறையுடன் படப்பிடிப்பு மற்றும் விழாக்களுக்கு போனால் ரகசியங்கள் அம்பலத்திற்கு வந்துவிடுமே என்கிற தயக்கமும் இருக்கிறதாம்! அட!!

கருத்துகள் இல்லை: