வியாழன், 28 அக்டோபர், 2010

மலசலக் குழியுள் இருந்த புத்தகப் பையினுள் சிசு

பிறந்து பத்து நாட்களேயான சிசு ஒன்று பாடசாலை புத்தகப் பையொன்றில் போட்டு மலசலக் குழியொன்றுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக வெலிமட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று காலையில் வெலிமட லந்தேகம பஹலகபில வெல என்ற இடத்திலுள்ள வீடொன்றுக்கு அருகாமையிலிருந்த மலசல குழியொன்றுக்குள் இருந்து இந்த ஆண் சிசு மீட்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை வேளை 5.30 மணியளவில் குழந்தையொன்றின் அழுகுரல் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்துள்ளது. அதனையடுத்து பிரதேசவாசிகள் தேடுதல் நடத்தியுள்ளனர்.
அப்போது அங்கு மலசலக்குழியொன்றுக்கு அருகாமையில் அந்த சத்தம் வந்துள்ளது. அதனையடுத்து தேடுதல் நடத்திய கிராம வாசிகள் மலசல குழியொன்றுக்குள் புத்தக பையொன்றை கண்டு எடுத்துள்ளனர்.                            தற்போது குழந்தை ஆரோக்கியமாகவுள்ளது.  வெலிமட பொலிஸார் குழந்தையின் தாயைத்தேடி வருகின்றனர்

கருத்துகள் இல்லை: