வியாழன், 28 அக்டோபர், 2010

தாலிபான் தீவிரவாதிகள் பிடியில் பாக். இளைஞர்கள்: விசேஷ பள்ளிகள் அமைத்து

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானிய இளைஞர்களை அங்கு ஆதிக்கம் செலுத்தும் தாலிபான் தீவிரவாதிகள் [^] லாவகமாக தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர்.

தாலிபான் தீவிரவாதிகள் இளைஞர்களை மூளைச் சலவை செய்வதற்காகவே பிரத்யேகமான பள்ளிக்கூடங்கள் தொடங்கியுள்ளனர். அங்கு அவர்களின் கைவரிசையை காட்டி இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்கின்றனர்.

அந்தப் பள்ளிகளில் பாகிஸ்தான் [^] அரசுக்கு எதிரான கருத்துகளைக் கூறி இளைஞர்கள் மனதில் நஞ்சை விதைக்கின்றனர். இவ்வாறு படிப்படியாக அவர்களுக்கு மூளைச் சலவை செய்து இறுதியில் அவர்களை மனித வெடிகுண்டுகளாக்குகின்றனர். இந்த வகைப் பள்ளிகள் கராச்சியில் அதிகம் செயல்பட்டு வருகின்றன.

அன்மையில் போலீசார் முஹமது சலீம் (16) என்ற 9-ம் வகுப்பு மாணவரை கைது செய்து விசாரணை [^] நடத்தினர். அதில் அவர் மனித வெடிகுண்டு பயிற்சி பெற்றதும், இதற்காகப் பிரத்யேகப் பள்ளிகள் செயல்பட்டு வருவதும் தெரிய வந்தது.

கருத்துகள் இல்லை: