செவ்வாய், 26 ஜூன், 2018

பாமக பாஜக தொண்டர்கள் மோதல் .... தமிழிசை டாக்டர் ராமதாசை தரக்குறைவாக பேசியதால் ...


tamilthehindu : பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சித்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்ததாகக் கூறி, சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் ஊர்வலமாகச் சென்ற பாமகவினர்.
 மோதலில் ஈடுபட்ட பாமக மற்றும் பாஜகவினரை அப்புறப்படுத்தும் போலீஸார்.
பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சித்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்ததாகக் கூறி, சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் ஊர்வலமாகச் சென்ற பாமகவினர். () மோதலில் ஈடுபட்ட பாமக மற்றும் பாஜகவினரை அப்புறப்படுத்தும் போலீஸார். சென்னை தி.நகரில் பாஜக, பாமகவினர் இடையே ஏற்பட்ட மோத லால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப் பட்டது.
பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சித்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னை தி.நகர் வைத்தியநாதன் சாலையில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக பாமகவினர் அறிவித்தனர்.

ஏ.கே.மூர்த்தி தலைமையில்

அதற்காக தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள பாமக அலுவலகத்தில் இருந்து அக்கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் பேரணியாக நேற்று சென்றனர். இந்தி பிரச்சார சபா அருகே பாதுகாப்புப் பணியில் இருந்த போலீ ஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
பின்னர் அனைவரையும் பேருந்துகளில் ஏற்றினர். அப் போது பாஜகவுக்கு எதிராக பாமகவினர் கோஷம் போட்டனர். சிறிது தூரத்தில் சாலையோரம் நின்றிருந்த பாஜகவினர், பாமகவுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதையடுத்து பேருந்தில் இருந்து இறங்கிய பாமகவினர், பாஜகவினரை நோக்கி ஓடினர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் அரசுப் பேருந்தின் கண் ணாடி உடைக்கப்பட்டது. இந்த மோதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இரு தரப்பினரையும் தடுத்த போலீஸார், பாமகவினரை மீண் டும் பேருந்தில் ஏற்றிச்சென்று அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். பேருந்தை சேதப்படுத்தியதாக 3 பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றவர்கள் மாலை யில் விடுவிக்கப்பட்டனர்.

ஜி.கே.மணி உறுதி

கருத்துகள் இல்லை: