திங்கள், 25 ஜூன், 2018

வி பி சிங்கை அடையாளம் காட்டிய தமிழக பேரணியும் மெரீனா கூட்டமும்

the Indian National Congress of Rajiv Gandhi (son of Indira), who claimed 414 seats in a 533-seat parliament, the majority being 267.
LR Jagadheesan : மண்டலை அமல்படுத்தியதால் ல் செய்யப்பட்டதாக வரலாறு இல்லை. விபிசிங் ஆட்சிக்கு வரக்காரணமாக இருந்த தேசிய முன்னணி உருவான துவக்கத்தை சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடத்தியவரும் அதே முக தான். அந்த சென்னை பேரணிக்குப்பின்னரே நேருவைவிட அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றிருந்த ராஜீவை தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்கிற நம்பிக்கை மற்ற பல “தேசிய” கட்சிகளுக்கே உண்டானது. அப்படி விபி சிங் பிரதமராக துவக்கப்புள்ளி வைத்தவரே, ஆட்சி பறிபோன நிலையில் அதே விபி சிங்குக்கு தமிழ்நாடு முழுக்க தன் தலைமையில் சிகப்புக்கம்பள வரவேற்பளிக்கவும் செய்தார். தன் ஆட்சிக்காலங்களில் தன் கட்சி சாராத மாற்றுக்கட்சிகளைச்சேர்ந்த காமராஜர், அம்பேட்கர், விபிசிங் ஆகிய மூவருக்கும் முக செய்த அளவுக்கு மரியாதை செய்த, சிறப்புச்செய்த வேறொரு அரசியல் தலைவர் உண்டா என்பது தெரியவில்லை.
கமண்டலங்களால் பதவிபறிக்கப்பட்ட விபிசிங்கை, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் துவங்கி குமரிமுனைவரை தன்னோடு அழைத்துச்சென்று தமிழ்நாடு நெடுக இடைவிடாமல் 48 மணிநேரம் சிகப்புக்கம்பள வரவேற்பளித்து கௌரவித்தவர் அன்றைய முதல்வர் முக. பதவி இழந்த ஒருவருக்கு அப்படி மாநிலம் தழுவிய அளவிலான மாபெரும் கௌரவம், சிறப்பான வரவேற்பு அதற்கு முன்பும் சரி பின்பும் சரி இந்திய அரசியலிலோ தமிழ்நாட்டளவிலோ ஒரு மாற்றுக்கட்சித்தலைமையால் அதுவும் மாநில அரசின் முதல்வர் பதவியில் இருந்த ஒருவரால்.

கருத்துகள் இல்லை: