ஞாயிறு, 24 ஜூன், 2018

பாஜக எம் எல் ஏ : பத்திரிகையாளர்கள் வரம்பு மீறினால் கொல்லப்படுவீர்கள்


bjp
Senior BJP leader Chaudhary Lal Singh
வெப்துனியா : வரம்பை மீறி செய்தி வெளியிட்டால் நீங்களும் கொல்லப்படுவீர்கள் என ஜம்மு - காஷ்மீர் மாநில மூத்த பாஜக தலைவர் சவுத்திரி லால் சிங் தெரிவித்துள்ளார். பாஜகவை சேர்ந்த எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் சர்ச்சைக்குரிய வகையில்  பேசுவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். அந்தவகையில் ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் தொணியில் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.சமீபத்தில் "ரைசிங் காஷ்மீர்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரியை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதுகுறித்து பேசிய ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் லால் சிங், காஷ்மீரில் உள்ள பத்திரிகையாளர்கள் செய்திகளை வெளியிடுவதில் ஒரு வரம்பை வகுத்துக் கொள்ள வேண்டும். இல்லையனில் சுஜாத் புகாரிக்கு ஏற்பட்ட நிலைதான் மற்றவர்களுக்கும் நேரக்கூடும் என மிரட்டல் தொணியில் பேசினார். இவரது பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை: