சனி, 28 அக்டோபர், 2017

ஜெயலலிதா கைரேகை ? உயிரோடு இருப்பவரின் கைரேகையில் உயிரோட்டமிருக்கும் ஆனால் ஜெயலலிதா கைரேகை .... ?

AAlnci.Spm.:  நாட்டுக்களின் மீது அலாதி நம்பிக்கை/ பிரியம் எனக்குண்டு .. காரணம் படிப்பறிவில்லாவிட்டாலும் யாரையும் ஏமாற்ற தெரியாத வெள்ளந்தி மனிதர்கள்.  மிகவும் நம்பிக்கையானவர்கள். .யாரையும் வஞ்சிக்கத் தெரியாத உயர்குணம் கொண்டவர்கள் ஜெயலலிதாவின் கைநாட்டு பெரும் சந்தேகத்தை தந்தது.. மேதாவித்தனம் என்ற இமேஜை சுக்குநூறாக்கிய சம்பவம் ஜெயலலிதா சுயநினைவோடு இருந்திருந்தால் கைநாட்டு வைத்திருப்பாரா என்ற சந்தேகம் இருந்தது.. அவர் சுயநினைவோடில்லை என்ற நிலையை மறைத்து 90 சதவிகிதம் குணமடைந்து விட்டதாக சொன்ன சில மணி நேரத்திற்குள்ளாக அவரிடம் கைநாட்டு பெற பட்டதாக மற்றொரு செய்தி இட்லி சாப்பிடுகிறாரென்று சொன்னவர்களின் பொய் இப்போது அம்பலமாக தொடங்கியிருக்கிறது.. ஜெயலலிதாவை வைத்து இவர்கள் களித்த களி ..இப்போது உடைபடுகிறது.. திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் டாக்டர் பாலாஜியை நீதிமன்றத்தில் (ஆஜராக) நேர்நிற்க உத்தரவிட்டது.

..
டாக்டர் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் நேர்நின்று சாட்சியம் அளித்தார் அதில் நிறைய உளறல்கள்..
20 இடங்களில் தான் கைநாட்டு வாங்கவேண்டும் ஆனால் 28 படிவங்களில் வாங்கியிருக்கிறீர்கள் எட்டு படிவம் என்னானது என்ற கேள்விக்கு பதில் இல்லை.. கைரேகை பற்றி அனுபவம் இருக்கிறதென்கிறீர் உயிரோடு இருப்பவரின் கைரேகையில் உயிரோட்டமிருக்கும் ஆனால் ஜெயலலிதா கைரேகை புள்ளி புள்ளியாக தானே இருந்தது அவர் இறந்தபிறகு எடுக்கபட்டதா என்ற கேள்விக்கும் டாக்டர் பாலாஜியிடம் பதில் இல்லை
தமிழக அரசிடம் முறையான அனுமதி பெறபட்டதா என்ற கேள்விக்கு இல்லையென பதில் அளித்தார்..
உங்கள் முன்னால் யார் படிவத்தில் கைநாட்டு வாங்கினார்கள் என்ற திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வழக்கறிஞரின் கேள்விக்கு வாங்கியது யாரென தெரியாதென்று பதில் சொல்லியிருக்கிறார்.
மருத்துவமனையில் சென்று கைநாட்டு பெற்றதற்கு ஆதாரமாக வீடியோவோ புகைப்படமோ இல்லை மருத்துவமனை லாக் சீட்டில் பதிவு இல்லை கைநாட்டு பெற்ற படிவத்தை அப்பலோ மருத்துவரிடம் கொடுத்ததற்கான ஆவணமோ அவர்கள் பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமோ இருக்கிறதா என்ற கேள்விக்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என்றார் டாக்டர் பாவாஜி...
இவையெல்லாம்
உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது கூறியவை..
..
மெல்ல வெளிச்சத்திற்கு வருகிறது
ஜெயலலிதா வின் மரணம் பற்றிய செய்திகளும் அவரை வைத்து பித்தலாட்டம் ஆடிய கூத்தும்..
இவையெல்லாம் நீண்ட விவாதங்களுக்கு வழிவகுக்கும்..ஆனால் உண்மை வெளிவந்தே தீரும்.

கருத்துகள் இல்லை: