திங்கள், 23 அக்டோபர், 2017

கந்து வட்டியும் கருகப்போகும் தமிழ் நாடும்!

Esther Nathaniel :
நெல்லையில் இன்று இடம்பெற்ற கொடூரம் உலகிலே எந்தவொரூ மூலையிலும் இடம்பெறாததே ! கடன் ஒரு குடும்பத்தையே சாப்பிட்டு விட்டது வட்டி அழகிய குழந்தைகளின் வாழ்வை அறுத்துவிட்டது!!ஈந்த அழகான குடும்பத்தை காந்துவட்டி காவுக்கொண்டதை நினைக்கும்போது எத்தனை துயரடா??
தமிழ்நாட்டின் துயர் நிறைந்த வறுமையும் வங்கிகள் வழங்கும் நுண்கடன் திட்டங்களாலும் ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கை கண்ணுக்கு தெரியாது நாசமாகிக்கொண்டுவருகிறது.
திரைப்படங்களில் வீரவசனம் பேசி கைதட்டும் விசில் சத்தம் வாங்கும் நடிகர் கூட்டங்கள் நாள்தோறும் நலியும் வறுமைக்கோட்டு மக்களுக்கு என்ன செய்கிறார்கள்? அவர்களின் வாழ்க்கையை படமாக்கி அதை நடித்து காசை பெருக்கும் பெருச்சாலிக்கூட்டங்கள் நிலையற்ற நிலைகெட்டுப்போன அரசினாலும் இந்த கொடுமைக்காரக்கூட்டத்துக்கு எவ்வாறு முடிவு கட்டுவது?
வறுமையாலும் இல்லாமையும் தமிழ்நாட்டின் சாபம்
பணக்காரன் பணக்காரன் ஆகிக்கொண்டேப்போகிறான்
ஏழை ஏழையாகி ஏமாந்தேப்போகிறான்
கந்துவட்டி வாங்க வாங்க தமிழ்நாட்டின் சாபத்தை கூட்டிக்கொண்டேப்போகிறார்கள்
பறந்து பறந்து துடிதுடீத்து இறந்த பச்சைக்குழந்தைகளின் ஆன்மா கந்துவெட்டிகளையும் அதைக்கண்டும்காணாத அரசையும் கருவறுக்காமல் விடாது!!

கருத்துகள் இல்லை: