சனி, 4 பிப்ரவரி, 2017

மெரீனா 144 தடை நீக்கம்

சென்னை மெரினாவில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் சிலர் வன்முறையை தூண்டிவிட்டு கலவரமாக மாற்றினர். இதனால் மெரினா கடற்கரை சாலை முதல் மீனவர்கள் வசிக்கும் நடுக்குப்பம் வரை போர்க்களமாக மாறியது. இதனையடுத்து 144 தடை உத்தரவு பிப்.12ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், மெரினாவில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறுவதாக கமிஷனர் ஜார்ஜ் அறிவித்துள்ளார். தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கின்றது. ஆனாலும் மெரினாவில் கூட்டம் நடத்தவோ அல்லது ஆர்ப்பாட்டம் செய்யவோ தடை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நக்கீரன்

கருத்துகள் இல்லை: