செவ்வாய், 31 ஜனவரி, 2017

அருள்மொழி : அடுத்தடுத்து பத்ம விருதுகள் கொடுக்குமளவு ரஜினிகாந்த் என்னதான் சாதித்து விட்டார்?

சரியான கேள்வி!!! அடுத்தடுத்து பத்ம விருதுகள்.. அப்படி என்னதான் சாதித்தார் ரஜினி? பத்ம விருதுகளை அடுத்தடுத்து கொடுக்கும் அளவுக்கு அப்படி என்னதான் நடிகர் ரஜினிகாந்த் சாதித்துவிட்டார் என்று திராவிடர் கழக பிரசார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய களத்தில் ரஜினி பெரும் விவாதப் பொருள் ஆகி விட்டார். காரணம் அவர் தமிழ்நாட்டில் ஐம்பது வருடங்கள் கோலோச்சி விட்டு ஒரு பெரும் பிரச்னை என்று வரும் போது பதுங்கிக் கொள்வதே காரணம். கமல் பற்றி யாரும் வாய் திறப்பதில்லை. காரணம் அவர் தனக்கும் அரசியலுக்கும் ஒத்து வராது என்று எப்போதோ சொல்லி விட்டார். ஆனால், ரஜினி இப்போது வரை தமிழக ரசிகர்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார் என்பது தான் குற்றச்சாட்டு. நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று போட்டு உடைத்து விட்டால் போண்டாமணி எப்படியோ, அல்வா வாசு எப்படியோ அப்படியே உங்களையும் நினைத்து விட்டுப் போவோம் என்கிறார் ஒரு மூத்த பத்திரிகையாளர்.  லைவ்டே

கருத்துகள் இல்லை: