தமிழகம்
முழுவதும் மாணவர்கள் நடத்தும் ஜல்லிகட்டு போராட்டத்தில் சிலர் குழப்பம்
விளைவிக்கின்றனர் என்று ஹிப்ஹாப் ஆதி பரபரப்பாக ஒரு கருத்தை
வெளியிட்டுள்ளார். அவருடைய கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு
தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் கருத்துக்கு பாரதிய ஜனதாவின் தலைவர்களில் ஒருவரான
எச். ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். ஆதியின் கருத்து சரியானது. போராட்டம்
தவறாக வழிநடத்தப்படுகிறது. தமிழ் பிரிவினைவாதிகள், முஸ்லிம் வெறியர்கள்
மற்றும் தேச எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்துகின்றனர்
என்றும் கூறியுள்ளார்.
டுவிட்டரில் எச். ராஜா இந்த கருத்தைப்பதிவிட்டுள்ளார். லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக