சனி, 28 ஜனவரி, 2017

பெண்களிடம் படுமோசமாக நடந்து கொண்ட காவலர்கள் .. பல சட்டப் பிரிவுகளில் மோசமான குற்றங்கள்

வ.உ.சி.மைதானத்திற்கு காலை 7.45-க்கே வந்திறங்கினார் சிட்டி கமிஷனர் அமல்ராஜ். மாணவர்கள் கலையாததால், அவர் செல்ஃபோனில் கொடுத்த டைரக்ஷன்படி, வெறியுடன் பாய்ந்தது போலீஸ். மைதானத்தில் இருக்கும் மாணவர்களின் மண்டை உடையும் தகவல் கேட்டு, அவினாசி ரோட்டில் உள்ள சி.ஐ.டி. கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு சாலை மறியலில் குதித்தனர். ஸ்பாட்டுக்கு வந்த மாநகர துணை கமிஷனர் லட்சுமி தலைமையிலான காக்கிகள் படை, லத்தியால் லாடம் கட்டி, மாணவர்களை கல்லூரிக்குள்ளேயே விரட்டி, வெளிக்கேட்டைப் பூட்டிவிட்டது. வ.உ.சி. மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள், காந்திபுரம் பஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ. சி.பி.ஐ.யின் ஆறுமுகமும் விடுதலைச் சிறுத்தைகளும் களத்தில் குதிக்க, போலீசின் வெறி அதிகமானது... பொதுமக்களையும் விட்டுவைக்கவில்லை.








மதுரைஜன. 19ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு, மதுரை மாணவர்களால் சிறை பிடிக்கப்பட்டது கோவை-நாகர்கோவில் பாசஞ்சர் ரயில். 23ஆம் தேதி காலை 7 மணி அளவில் ரயிலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் போலீசார். ஆனாலும் அண்ணாத்தோப்பு, செல்லூர், தத்த னேரி, கீழத்தோப்பு, ராஜாமில் ரோடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரயிலை நகரவிடவில்லை. டி.ஐ.ஜி.முருகன் அந்த இளைஞர்களின் பெற்றோர் களிடம், மாலை 5 மணி வரை அவகாசம் கொடுப்ப தாகக் கூறினாலும் அந்தப் பகுதிக் கடைகளை அடைக்கச் சொல்லிவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்களையும் இளைஞர்களையும் விரட்டினர். 4 மணி அளவில் இன்னொரு இஞ்சினைக் கொண்டு வந்து, போலீஸ் வசம் இருந்த ரயிலை இழுத்துச் சென்றனர்.  

-ஷாகுல்


தேனிபுது பஸ் ஸ்டாண்ட் அருகே கலையாமல் இருந்த மாணவர்களையும் இளைஞர்களையும் குண்டுக்கட்டாகத் தூக்கியும் லத்தியால் விரட்டியும் கலைத்தனர்.

திண்டுக்கல் அதிகாலை 6 மணிக்கு வந்திறங்கிய எஸ்.பி. சரவணன் தலைமையிலான காக்கிகள் பட்டாளம், கலைந்துசெல்ல மறுத்தவர்களை வலுக்கட்டாய மாகக் கைது செய்து, அருகில் இருக்கும் கல்யாண மண்டபத்தில் அடைத்து வைத்து போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய இருபது இளைஞர்களைத் தேடிப் பிடித்து வழக்குப் பதிவு செய்தனர்.

-சக்தி

 காரைக்குடி ஏழு நாட்களாக தேவர் சிலை அருகே போராடிக் கொண்டிருந்தவர்களைக் கலைக்க, தேவகோட்டை டி.எஸ்.பி. தலைமையிலான போலீஸ் படையைப் பயன்படுத்தினர். லத்தி சார்ஜால் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

-கீரன்
திருச்சி எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானா அருகே திரண்டு திருச்சியையே திணற வைத்த மாணவர்கள்-இளைஞர்களிடம் மிகவும் பக்குவமாகவும் கனிவாகவும் பேசினார் துணைக் கமிஷனர் மயில்வாகனன். அவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு புறப்பட்டனர் மாணவர்களும் இளைஞர்களும். இதுபோலவே நெல்லை, தூத்துக்குடியிலும் அதிரடி இல்லை. விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் இதே நிலைதான்.

-சிவன், சேகர், ஜெ.டி.ஆர்.

விருதுநகர்ஆவேசப் பாய்ச்சலோடு வந்த புதுப்பட்டி காளை, காவலுக்கு நின்ற ஆயுதப்படை போலீசான சங்கரை கொம்பால் முட்டித் தூக்கி வீசியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கர், சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

 -ராம்கி

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைப்பதற் காக 21-ஆம் தேதி இரவு மதுரை வந்த முதல்வர் பன்னீர்செல் வத்தால், மறுநாள் அங்கு செல்ல முடியாத அளவுக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. 23-ஆம் தேதி அதிகாலையிலேயே எஸ்.பி. விஜயேந்திர பிதாரி, ஏ.டி.எஸ்.பி. வெள்ளைத்துரை, டி.எஸ்.பி. விஜயபாஸ்கர் தலைமையில் 2000 போலீசார் வந்திறங்கினர். அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் அன்னராஜின் ஐடியாப்படி, கிராமப் பெரியவர்களை மிரட்டியும் பயனில்லை. போராட்டக்காரர்கள் மீது லத்தி அடி ஆரம்பமானது. இன்ஸ்பெக்டர் அன்னராஜ் என்ன நிலைமையில் இருந்தாரோ, சட்டவிதிகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய இளைஞர்களைக் குறிவைத்து மூர்க்கமாகப் பாய்ந்தார். "அவர்களை அடிக்காதீங்க' என கெஞ்சிய மக்கள் மீது கற்களைவீசித் தாக்க ஆரம்பித்தார். பதிலுக்கு மக்களும் கற்களை வீச, ஒரே ரணகளமானது. இந்தக் கலவரத்துக்கிடையே உரிமைப் போராளி முகிலனை தனியாக இழுத்துச் சென்று, பல போலீஸாரை சுற்றி நிக்க வைத்துவிட்டு, முகிலனைத் துவைத்து எடுத்தார் அன்னராஜ். முகிலனின் நெஞ்சிலும் மர்ம உறுப்பிலும் மிருகத்தனமாக மிதித்தார். இதைப் படம் பிடிக்க முற்பட்ட பத்திரிகையாளர்களை காது கருகும் அளவுக்கு கெட்ட வார்த் தைகளால் அர்ச்சித்தார். முகிலனைத் தூக்கி ஒரு வேனில் போட்ட அன்னராஜ், ஒரு மாணவியின் மண்டையையும் பொளந்துவிட்டார். வீடுகளுக்குள் புகுந் தும் ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பித்தனர் அன்னராஜும் போலீசாரும். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் முகிலன்.

-அண்ணல்



வ.உ.சி.மைதானத்திற்கு காலை 7.45-க்கே வந்திறங்கினார் சிட்டி கமிஷனர் அமல்ராஜ். மாணவர்கள் கலையாததால், அவர் செல்ஃபோனில் கொடுத்த டைரக்ஷன்படி, வெறியுடன் பாய்ந்தது போலீஸ். மைதானத்தில் இருக்கும் மாணவர்களின் மண்டை உடையும் தகவல் கேட்டு, அவினாசி ரோட்டில் உள்ள சி.ஐ.டி. கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு சாலை மறியலில் குதித்தனர். ஸ்பாட்டுக்கு வந்த மாநகர துணை கமிஷனர் லட்சுமி தலைமையிலான காக்கிகள் படை, லத்தியால் லாடம் கட்டி, மாணவர்களை கல்லூரிக்குள்ளேயே விரட்டி, வெளிக்கேட்டைப் பூட்டிவிட்டது. வ.உ.சி. மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள், காந்திபுரம் பஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ. சி.பி.ஐ.யின் ஆறுமுகமும் விடுதலைச் சிறுத்தைகளும் களத்தில் குதிக்க, போலீசின் வெறி அதிகமானது... பொதுமக்களையும் விட்டுவைக்கவில்லை.

-அருள்குமார்


பஸ் நிலையம் அருகே உள்ள வ.உ.சி.பூங்கா மைதானத்தில் காலை 9 மணிக்கே வந்திறங்கியது போலீஸ் படை. வஜ்ரா வாக னம், தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் லாரி, கண்ணீர்ப் புகை குண்டு, துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை என சகல முன்னேற் பாடுகளோடு வந்திருந்தனர். ஏ.டி.எஸ்.பி. சந்தானபாண்டியனுடன் இணைந்துகொண்டார் ஏ.டி.எஸ்.பி.பாலாஜி சரவணன். போராட்டத்தின் வடிவமாக தேசியகீதம் பாட ஆரம்பித்துவிட்டனர் மாணவர்கள். பாடி முடித்ததும் மாணவர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது போலீஸ் படை. மாணவிகள், பெண்களிடம் அத்துமீறி ஆட்டம் போட ஆரம்பித்தனர், மைதானத்திலிருந்து பஸ்நிலையத் துக்குள் ஓடியவர்களைக் குறிவைத்து வெளுக்க ஆரம்பித்தனர். கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரும் டவுன் இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரும் தங்களின் கைககளைக் கொண்டே மாணவர்கள் முகத்தில் சரமாரியாக குத்துவிட்டனர். வெளியூர்களுக்குச் செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருந்த பொதுமக்களையும் விடவில்லை ஈரோடு போலீஸ். சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பும் ரயில்வே ஸ்டேஷன் முன்பும் குழுமியிருந்தவர்களை, கமிஷனர் சஞ்சய்குமார் தலைமையிலான போலீஸ் படை கலைந்து போகச் செய்தது.

-ஜீவா, சிவசு  நக்கீரன்

கருத்துகள் இல்லை: