வெள்ளி, 27 ஜனவரி, 2017

ஆளுநர் சண்முகநாதன் ஒரு ஆர் எஸ் எஸ் மன்மத ராஜன்

இளம்பெண்கள் கிளப் 11 விவகாரங்கள்... மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் அம்மாநில ராஜ்பவனை எப்படியெல்லாம் இளம்பெண்கள் கிளப்பாக மாற்றி வைத்திருந்தார் என பரபரப்பான கடிதத்தை ஆளுநர் மாளிகை ஊழியர்களே ஜனாதிபதி, பிரதமருக்கு பக்கம் பக்கமாக எழுதி By: Mathi Published: Friday, January 27, 2017, 10:14 [IST] Subscribe to Oneindia Tamil ஷில்லாங்: மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதனின் சல்லாப லீலைகள் குறித்து பக்கம் பக்கமாக ஜனாதிபதி, பிரதமர் அலுவலகத்துக்கு 100-க்கும் மேற்பட்ட ராஜ்பவன் ஊழியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் சண்முகநாதனின் படுக்கை அறை வரை இளம்பெண்கள் சுதந்திரமாக சென்று வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயா ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த பிரமுகர்தான் சண்முகநாதன் என அனைத்து ஆங்கில ஊடகங்களும் சுட்டிக் காட்டுகின்றன. இந்த நிலையில் ராஜ்பவனில் பிஆர்ஓ பணிக்காக நேர்முகத் தேர்வின் போது இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் சண்முகநாதன் என ஒரு புகார் எழுந்தது. இந்த புகாரைத் தொடர்ந்து தற்போது சண்முகநாதன் மீது சல்லாப புகார்கள் அடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து சண்முகநாதன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். tamiloneindia

கருத்துகள் இல்லை: