சனி, 20 ஆகஸ்ட், 2016

அதிமுக எம்பி சத்தியபாமாவும் திருச்சி சிவா ,சசிகலா புஷ்பா கூட்டணியில்? சத்தியபாமாவின் கணவர் புகார்,

சென்னை: திமுகவின் ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா கூட தன் மனைவி சத்தியபாமா கட்சியை மறந்து அன்யோன்யமா இருந்ததாக கணவர் வாசு பகீர் பேட்டியளித்துள்ளார்.
 அதிமுகவின் லோக்சபா எம்.பி.யான சத்தியபாமா மீது அவரது கணவரே ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அத்துடன் விவகாரத்து கோரி நோட்டீஸும் அனுப்பியிருந்தார்.ந்த நிலையில் ஜூனியர் விகடன் இதழுக்கு வாசு அளித்த பேட்டியில், "சசிகலா புஷ்பா, மல்லிகா பரமசிவம், சத்தியபாமா, திருச்சி சிவா எல்லாருமே கட்சியை மறந்து ரொம்ப அன்யோன்யமா இருந்தாங்க... இது சம்பந்தமா நான் அப்பவே அம்மாவுக்கு ஒரு புகார் அனுப்பினேன்.. ஆனா அதை அம்மாகிட்ட கொடுக்கவிடாம தடுத்துட்டாங்க என கூறியுள்ளார்.
 மேலும் "சசிகலா புஷ்பா மாதிரி என்னைக்காவது ஒருநாள் எல்லா விவரமும் அம்மாவுக்குத் தெரியவரும். அப்ப சசிகலா புஷ்பா மேல எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போல சத்தியபாமா மேலயும் எடுப்பாங்க" என்றும் வாசு கூறியுள்ளார்.  ஆனால் சத்தியபாமாவோ, ‘குடும்ப விஷயத்தை இப்படி பத்திரிகைகளுக்குச் சொல்றது நல்லாவா இருக்கு. அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லிட்டுப் போகட்டும். நான் யாரையும் குறை சொல்லி எப்பவுமே பேச மாட்டேன். மக்களுக்குச் செய்ய வேண்டிய வேலை ஆயிரம் இருக்கு" என விளக்கமும் கொடுத்திருக்கிறார்.  tamiloneindia.com

கருத்துகள் இல்லை: