வியாழன், 18 ஆகஸ்ட், 2016

ஜாக்கி வாசுதேவ் இஷா யோகாவின் அனைத்து கிரிமினல் நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்துவோம் .. அமிர்தம் .. ஜனநாயக மாதர்சங்க துணை தலைவி


கோவையில் ஜனநாயக மாதர் சங்க மாநில துணை தலைவர் அமிர்தம் , ஈசா மையம் மீது தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் வந்து கொண்டு இருப்பதாகவும் எனவே ஈசா மையம் மீதான புகார்கள் குறித்து உயர்மட்ட குழு விசாரணை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் ஈசா மையத்தால் பாதிக்கப்பட்ட பலர் தங்களிடம் முறையிட்டு இருப்பதாகவும் ஈசா மையத்தில் உள்ள பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட் டுள்ளதுடன் , அங்கு மோசமான சம்பவங்களும் நடைபெற்று இருக்கிறது. ஈசா மையத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் அவற்றை வெளியிட இருப்பதாகவும் அமிர்தம் தெரிவித்தார். தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் ஈசா மையம் மீது தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் முக்கியமான ஆதாரங்களை வெளியிடப்போவதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: