ட இந்திய இந்துக்களின் ஆன்மீக குரு அஸ்ராம் பாபுவை கடந்த சனிக்கிழமையன்று இரவு 12 மணிக்கு காவல்துறையினர் ஒருவழியாக கைது செய்துள்ளனர். ஜோத்பூர் குருகுலத்தில் பயின்ற 16 வயது நிரம்பிய உத்திர பிரதேச மாணவியை  ஆகஸ்டு 15 அன்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புதுதில்லி கமலா மார்க்கெட் காவல்நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜோத்பூர் போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் நேரில் வந்து ஆஜராகுமாறு அஸ்ராம் பாபு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். ஆனால் தனக்கு நரம்புக்கோளாறு இருப்பதாகவும், அது சரியானவுடன் நேரில் வருவதாகவும் போலீசாரிடம் கதை விட்ட அஸ்ராம் பாபு எப்படியாவது தப்பிக்கலாமென்று பார்த்தார். பெண்ணை காரக்டர் அசாசினேஷன் செய்வது ஆணாதிக்க பொறுக்கிகளின் கைவைந்த கலை