வெள்ளி, 6 செப்டம்பர், 2013

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு 3–ந் தேதிக்கு ஒத்திவைப்பு ! வக்கீல்கள் ஸ்ட்ரைக் காரணம்

புதுவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் காஞ்சி வரதராஜ
பெருமாள்கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. வழக்கு இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாலும், முதன்மை நீதிபதி முருகன் விடுப்பில் சென்றிருந்ததாலும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மேரிஅன்சலாம் இந்த வழக்கு விசாரணையை அடுத்தமாதம் 3–ந் தேதிக்கு ஒத்திவைத்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரில் ரகு, சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 13 பேர் ஆஜரானார்கள். ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 10 பேர் ஆஜராகவில்லை.

கருத்துகள் இல்லை: