புதன், 4 செப்டம்பர், 2013

ஐரோப்பாவின் பெரிய நூலகத்தை மலாலா திறந்து வைத்தார் ! Europe's largest public library formally open by Malala!

The £188m Birmingham library contains about a million books. Photograph: Christopher Furlong/Getty Images
Malala Yousafzai, the Pakistani teenager shot by the Taliban for championing the right of girls to an education, is to formally open Europe's largest public library in Birmingham on Tuesday  ,
Malala will place her copy of The Alchemist by Paolo Coelho on the library's shelves. The schoolgirl will receive membership to the archive before unveiling a commemorative plaque during the opening ceremony.
The 31,000 sq m (333,000 sq ft) library, dubbed the People's Palace by the Dutch architectural firm Mecanoo which came up with the design, is clad partly in gold and covered in 5,357 interlocking metal circles.கல்விக்காக பிரசாரம் செய்து வந்தார். இதற்கு எதிர்‌ப்பு தெரிவித்து அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பலத்த காயம‌டைந்து உயிர் பிழைத்த அவருக்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதிகரித்தது. மரணத்தில் பிடியில் இருந்து மீண்ட மலாலா, தற்போது இங்கிலாந்தில் படித்து வருகிறார். அவரது குடும்பம் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் செட்டிலாகிவிட்டது. 16 வயதான மலாலா பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். பர்மிங்காம் நகரில் 1900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்தை திறந்து வைத்தார்.
இந்த நூலகத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள் உட்பட பல்வேறு வகையான நூல்கள் இடம்பெற்றுள்ளன. ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய நூலகம் இது தான் நூலகத்தை திறந்து வைத்து பேசிய மலாலா, புத்தக வாசிப்பு, அறிவு, கல்வியால் மட்டுமே உலகில் அமைதியையும், சமாதானத்தையும் அடைய முடியும். ஒரு புத்தகம், ஒரு பேனா, ஒரு குழந்தை, ஓர் ஆசிரியரால் உலகையே மாற்ற முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது. பேனாவும், புத்தகமும் தீவிரவாதத்தை தோற்கடிக்கும் ஆயுதம் என்றார். மேலும் பேசிய அவர், பர்மிங்காம் தான் இங்கிலாந்தின் இதயத்துடிப்பு. இந்த நகரம் எனக்கு மகிவும் ஸ்பெஷலானது. ஏனென்றால் நான் குண்டடிப்பட்ட 7 நாட்களுக்கு பிறகு இங்கு தான் உயிர் பிழைத்தேன். இந்த நகரத்திற்கு என்னை பிடித்துள்ளது என்பதை நூலக திறப்பு விழா மூலம் தெரிகிறது. நானும் இந்த நகரை விரும்புகிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை: