வெள்ளி, 19 ஜூலை, 2013

மதிய உணவை தலைமை ஆசிரியர்கள் ருசித்த பிறகே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில் கடந்த 16-ந்தேதி மதிய உணவு சாப்பிட்ட 23 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் சமையலர்கள் சாப்பிட்டு பார்த்த பின்னரே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தானியங்கள் மற்றும் சமைத்த உணவுகளின் தரத்தை தொடக்க கல்வி அதிகாரிகள் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு அதிகாரியும் மாதம் 4 பள்ளிகளிலாவது ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது.உத்தரபிரதேச பள்ளிகளில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வாரத்தில் 4 நாட்கள் அரிசி உணவும், 2 நாட்கள் கோதுமை உணவும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க<

கருத்துகள் இல்லை: