புதன், 17 ஜூலை, 2013

22 குழந்தைகள் பலி ! உணவில் விஷம் இருந்ததாக பீகார் கல்விதுறை அமைச்சர் தகவல்

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில், அரசு துவக்கப் பள்ளியில், செவ்வாயன்று
மதியம் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.அவர்களை அருகில் உள்ள சாதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் 22 குழந்தைகள் உயிரிழந்தனர்.இந்நிலையில் மாணவர்கள் சாப்பிட்ட உணவு மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக அம்மாநில கல்விதுறை அமைச்சர் ஷாகி கூறுகையில் உணவு பொருளில் பாஸ்பரஸ் என்ற வேதிப்பொருள் இருந்ததாகவும்,இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசை பலவீனப்படுத்தும் சதிச் செயலாகவும் இச்சம்பவம் இருக்கலாம் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: