புதன், 17 ஜூலை, 2013

பீகாரில் மற்றுமொரு பள்ளிகூட உணவில் விஷம் ! 15 குழந்தைகளில் 3 பேரின் நிலை கவலைக்கிடம்

பீகார் மாநிலம் சாப்ரா அருகில் உள்ள தரம்சதி கிராமத்தில் உள்ள அரசு
தொடக்கப்பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. மயங்கி விழுந்த குழந்தைகள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 22 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் குழந்தைகள் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் உணவில் விஷம் கலந்திருப்பதாக மாநில மந்திரி கூறியுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. மதுபானியில் உள்ள ஒரு பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் 13 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மதுபானிக்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: