சனி, 9 அக்டோபர், 2010

பாராளுமன்றத்தில் நவராத்திரி பூஜைவழிபாடு


வருடந்தோறும் நடைபெறும் நவராத்திரி பூஜை இன்றைய தினம் (8) பாராளுமன்றத்தில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பிரதி சபாநாயகர் பிரியங்கா ஜயரட்ன பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

பாராளுமன்றத்தில் புத்த சாசன மத அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் நடைபெற்ற இப்பூஜை வழிபாடுகளில் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சரஸ்வதி பூஜையைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: