வெள்ளி, 28 மே, 2010

வலிகாமம், வட மராட்சி, தென்மராட்சி, தீவகம் ஆகிய பகுதிகளில் "வெசாக்'' கோலாகலம்; யாழ். நகரில் வண்ணமிகு


வெசாக் பண்டிகையை ஒட்டி குடாநாட்டின் எல்லாப் பிரதேசங்களிலும் பரவலாகப் பந் தல்களும், வெளிச்சக் கூடுகளும் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. வலிகாமம், வட மராட்சி, தென்மராட்சி, தீவகம் ஆகிய பகுதிகளில் பிரதான இடங்களில் பந்தல்கள் அமைக் கப்பட்டு, வெளிச்சக் கூடுகள் அமைக்கப் பட்டு, கண்கவர் மின்குமிழ்கள் பொருத் தப்பட்டிருந்தன.ஆரியகுளம் விகாரை மற்றும் நகரின் பல பகுதிகளிலும் வெளிச்சக்கூடுகள் கட் டப்பட்டு நகர் எங்கும் நேற்றிரவு வண்ண மயமாகக் காட்சியளித்தது. பிரதானமாக யாழ். துரையப்பா விளை யாட்டரங்கு, கோட்டை, பொது நூலகம் அடங்கிய பகுதிகளில் விசேட பந்தல்கள் மின்னொளியுடன் ரம்மியமாக அமைக்கப் பட்டிருந்தன. விதம்விதமான அலங்கார வெளிச்சக்கூடுகளும் கட்டப்பட்டிருந் தன. அப்பகுதியில் நாலா திக்கிலும் கண் கவர் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு பிரதேசம் முழுவதும் ஜெகஜோதியாகக் காட்சியளித்தது. விசேட மேடைகள் அமைக்கப்பட்டு பக்தி கீதங்களும் இசைக்கப்பட்டன. நேற்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பிராந்திய படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க கலந்துகொண்டார். படை அதிகாரிகள், அரச பிரமுகர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் நேற்றைய வெசாக் காட்சிகளைக் கண்டுகளித்தனர். நேற்றுக்காலையிலும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அங்கு அமைக்கப்பட்டிருந்த தானசாலைகளில் பொதுமக்களுக்கு உணவு வகைகள் படையினரால் பரிமாறப்பட்டன.

கருத்துகள் இல்லை: