சனி, 29 மே, 2010

பௌத்த மதம் சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமானதொன்றல்லமுதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்

கடந்த காலங்களில் நாங்கள் பௌத்த   மதநிகழ்வுகளில் பங்கு பெற்றாத நடை முறை  இருந்தது.         ஆனால் தற்போது அந்நிலைவரம் மாற்றப்பட்டு ஏனைய மதங்களையும்    மதித்து நடக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.எல்லா மதங்களும்  நல்ல விடயங்களையே கூறுகின்றன.
அதேபோன்றே பௌத்தம்.     அவை கூறும் கருத்துக்களை பின்பற்றுவதன் மூலம்    நாம் சிறந்த மனிதனாகவும்    மற்றவர்களுக்கு    வழிகாட்டியாகவும் இருக்க முடியும் »     இவ்வாறு கிழக்கு மாகாணசபை    முதலமைச்சர்    சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கல்குடா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி     சீ. ஐ. சமரசிங்க தலைமையில்      நடைபெற்ற வெசாக் தின     மதவழிபாடு அன்னதான நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.    இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் விஜேய குணவர்த்தன,     மட்டக்களப்பு      மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் ஐ.எம். கருணாரட்ன ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
அங்கு மேலும் அவர் உரையாற்றும் போது, பௌத்தம் பாவம் செய்ய வேண்டாம் எனக் கூறுகிறது. எமது சமூகத்தை வளர்க்க எல்லா மதநிகழ்வுகளிலும் பங்கு கொண்டு மனிதனாக வாழப்  பழகிக்கொள்ளவேண் டும் என்ற நிலைப்பாடு உள்ளது.  பௌத்த மதம் சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமானதொன்றல்ல என்ற வரலாற்று உண்மைகள் என்னவென்பதை நீங்கள் அறிவீர்கள்.        எனவே தமிழ் மக்களும் பௌத்த மதசிந்தனைகளை பின்பற்றி மனிதனாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
கடந்த கால கசப்பான உணர்வுகளை மறந்து சகல இன மக்களையும் ஒன்று சேர்க்கும் நிகழ்வாக எல்லோரும் ஒற்றுமையாக வாழப் பழகிக்கொள்ளக் கூடிய சூழ்நிலையை செவாக்தினத்தில் உருவாக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: