வியாழன், 27 மே, 2010

ராஜபக்சே லைனுக்கே வராத ரஜினி, அவரது அழைப்பையும் எடுத்த எடுப்பில் புறக்கணித்து, இனியொரு

 வரிசையாக தமிழ் திரைப்படங்கள் உத்திக்கொள்வதால் ஏற்கனவே நடுங்கி போய உள்ள சினிமாக்காரர்கள்  வெளிநாட்டு தமிழ் விசில் அடிச்சான் குஞ்சுகளை பகைத்து கொள்ள விரும்பவில்லை


இலங்கை திரைப்பட விழாவில் எப்படியாவது பங்கேற்க வேண்டும் என்று ரஜினிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே ரகசிய தூது அனுப்பினார். ஆனால் அதை அவர் வந்த வேகத்திலேயே தூக்கி எறிந்தார், என்று கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடுத்த வாரம் துவங்கும் சர்வதேச திரைப்பட விழாவில் எப்படியாவது இந்தியாவின் முதல் நிலைக் கலைஞர்களைப் பங்கேற்க வைத்துவிட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது இலங்கை அரசு. ஆனால் இதற்கு தமிழ் திரையுலகம் மசியவில்லை.

சீமானின் நாம் தமிழர் இயக்கம் மற்றும் தமிழ் திரையுலகம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி இந்த விழாவின் தூதராக இருந்த அமிதாப் அந்தப் பதவியிலிருந்தே விலகிக் கொண்டார். அந்த விழாவுக்குப் போகமாட்டேன் என்றும் கூறிவிட்டார். புதிய தூதராக சல்மான் கான் பொறுப்பேற்றுள்ளார்.

அமிதாப் குடும்பத்திலிருந்து அபிஷேக், ஐஸ்வர்யா ராய் என யாருமே இந்த விழாவில் பங்கேற்க மாட்டோம் என் அறிவித்துள்ளனர்.



இந் நிலையில், உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்களைக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இந்த விழாவுக்கு வருமாறு இலங்கை அரசு சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் அழைப்பிதழ் கொடுத்தது.

பொதுவாக, ஒரு மரியாதைக்காகவாது இதுபோன்ற அழைப்பிதழ்களைப் பெற்றுக் கொள்ளும் ரஜினி, இந்த அழைப்பிதழைப் பெறவும் மறுத்துவிட்டார். அவரது அலுவலகமும் இந்த அழைப்பிதழைப் பெற்றுக் கொள்ளவில்லை. இந்தச் செய்தி வெளியில் தெரிந்த பிறகுதான், தமிழ் திரையுலகம் வேகத்துடன் செயல்பட்டு விழாவைப் புறக்கணிக்க வேண்டுகோள் விடுத்தது.

இந் நிலையில் அதிபர் ராஜபக்சேவே ரகசியமாக தூது அனுப்பியுள்ளார் ரஜினிக்கு. எப்படியாவது இந்த விழாவில் ரஜினி பங்கேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் ராஜபக்சே லைனுக்கே வராத ரஜினி, அவரது அழைப்பையும் எடுத்த எடுப்பில் புறக்கணித்து, இனியொரு முறை இதுபற்றிப் பேசவோ யாரும் தன்னைத் தொடர்பு கொள்ளவோ வேண்டாம் என்று வேகமாகக் கூறியுள்ளார்.


இதுகுறித்து ரஜினியின் அலுவலகத்தில் நாம் தொடர்பு கொண்டபோது, "இலங்கைத் தரப்பில் யார் தொடர்பு கொண்டாலும் அதற்கு பதிலளிக்கவோ, பெரிதாக ரியாக்ட் பண்ணவோ வேண்டாம் என்று ரஜி்னி கூறிவிட்டார் என்றனர்.

 சந்திரமுகி படத்திற்கு பின்பு ரஜனியால் ஒரு உருப்படியான வெற்றிப்படத்தை கொடுக்க முடியவில்லை. அவரது சிவாஜி படம் பல இடங்களில் தோல்வி கண்டது ஆனால் அதை பணத்தை கொடுத்து சத்தம் இல்லாமல் சமாளித்து விட்டார்கள். வெளிவரப்போகும் இந்திரன் ஊத்திக்கொள்ளப்போவதாக இப்போதே பலரும் கூறுகிறார்கள் இந்த நிலையில் அண்மையில் வெளிவந்த படங்களில் பெருவெற்றி அடைந்த படங்கள் உண்மைகள் அங்காடித்தேருவும் பையாவும் தான். பேராண்மை போன்ற ஐந்தாறு படங்கள் போட்ட முதலை காப்பற்றிவிட்டன. மிகுதி நூற்றி எழுபதுக்கு மேற்பட்ட படங்கள் பப்படமாகி விட்டன. இந்த நிலையில் ஜனாதிபதியின் அழைப்பை வேறு ஏற்றுக்கொண்டால் ஒட்டு மொத்த தமழ் சினிமாவுக்கும் கோவிந்தா தான் என்று ரஜனியும் ஏனைய கோடம்பாக வியாபாரிகளும் முடிவெடுத்து விட்டன. வெளிநாட்டு வெங்காயங்களே தமழ் சினிமாவை காப்பற்றுங்கள்

கருத்துகள் இல்லை: