வெள்ளி, 28 மே, 2010

தலித் அமைச்சர் அமைச்சர் ராசா ஒரு மிகச்சிறிய மனிதர்: ஜெயலலிதா சாதி வெறி பிடித்த

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்திற்கு புதன்கிழமை வந்த ஜெயலலிதா செய்தியாளர்களை சந்தித்தார்.
கேள்வி: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இருந்து மத்திய மந்திரி ஆ.ராசாவை பிரதமர் காப்பாற்ற முயற்சி செய்கிறாரா?
பதில்: ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய திமுக அமைச்சர் ராசாவைக் காப்பாற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எல்லா வகையிலும் முயற்சி செய்கிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஊழலுக்கான ஆதாரங்கள் செய்தித்தாள்களிலும், பத்திரிகைகளிலும் வெளியாகி உள்ளன. பல்வேறு தொலைக்காட்சி செய்திகளிலும் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இதெல்லாம் அனைவருக்கும் தெரியும். ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெறுகிறது. தேவையான அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ ஏற்கனவே பெற்றிருக்கும். எனவே இந்த விவகாரம் தொடர்பாக உரிய முறையில் முழுமையான அறிக்கை அளிக்க வேண்டியதும், ஊழலில் தொடர்புடைய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
பிரதமர் மன்மோகன் சிங்கை பொறுத்தவரை மத்திய அமைச்சர் ராசா ஒரு மிகச்சிறிய மனிதர். இருந்தபோதிலும் அவர் மீது பிரதமர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்குக் காரணம் ராசா அல்ல. ராசாவை விட பன்மடங்கு அதிக பலம் மிக்க வேறொருவர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார். அந்த நபரை பாதுகாக்கத்தான் பிரதமர் முயற்சி மேற்கொண்டுள்ளார். 

தலித் அமைச்சர் ராசா ஒரு மிக சிறிய மனிதர் என்று பிராமண பெண் ஜெயலலிதா கூறியுள்ளார் எவ்வளவு சாதி வெறி பிடித்த வசனம் ?

கருத்துகள் இல்லை: