வியாழன், 27 மே, 2010

சரணடைய வந்த புலிகளுடன் விஜய நம்பியார் .......



இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சரணடைய வந்த புலிகளுடன் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதான அதிகாரி விஜய நம்பியார் நேரடியாகத் தொடர்பு வைத்திருக்கவில்லை என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் பான்கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெஸிர்கி இதனைத் தெரிவித்துள்ளார். சரணடையுமாறு கோரப்பட்டவர்களுடன் தனக்கு நேரடித்தொடர்பு இருந்திருக்கவில்லை என்பதை விஜய நம்பியார் தெளிவுபடுத்தியுள்ளார். அவர்களுடன் அவருக்கு நேரடித்தொடர்பு இருக்கவில்லை. அவர் இலங்கை அரசுத் தலைவர்களுடன் பேசினார். தமிழ் சமூகத்தைச் சார்ந்த வர்களின் தகவல்களை அவர்களுக்குத் தெரிவித்தார் என்று பான் கீ மூனின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: