வெள்ளி, 28 மே, 2010

கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின்


கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பாளர் நாகராஜ் தலைமையில் கோவை செஞ்சிலுவை சங்கத்தின் முன்பாக தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் வாழ்வுரிமையை காக்கவும், விவசாய கிராமங்களில் பொருளாதாரத்தை முன்னேற்றவும் சுதேசிய பானமான கள் என்ற தென்னை பாலை தென்னை மரத்திலிருந்து இறக்குவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்த தடையை நீக்க வலி யுறுத்தியும், தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், கோவை நகரில் வெட்டப்படும் ஒரு மாரத்திற்கு பதிலாக ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு இயற்கை வளத்தை காக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கொங்கு லோகநாதன், இ.எம்.பொன்னுசாமி, தமிழ்நாடு விவசாய சங்கங்கள் மற்றும் பிஜேபி கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: