சனி, 29 மே, 2010

புலிகள் அமைப்பின்் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய உறுப்பினர் ஒருவர் புல்மோட்டை கட்டக்குளம்மீதிரியாய பிரதேசத்தில் வீடொன்றில் மறைந்திருந்த போது நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். செல்வகுமார் உதயகுமார் என்பவே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கடந்த காலங்களில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தகவல்களி கிடைத்துள்ளதாக காவற்துறையினர் கூறியுள்ளனர். சந்தேக நபர் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு புல்மோட்டை காவற்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

கருத்துகள் இல்லை: