இதற்கு, கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்களி டம், பலத்த வரவேற்பு கிடைத்துள் ளது. முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து, ஜெயலலிதா வசித்த, வேதா இல்லம், அவர் பெயரில் உள்ளதா அல்லது வேறு யார் பெயருக்கும், உயில் எழுதி வைக்கப் பட்டு உள்ளதா என, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஒருவர் வசித்த இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்றால், அவரின் வாரிசுதாரர் களிடம்,ஒப்புதல் பெற வேண்டும்.ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோருக்கு வாரிசு உரிமை கோர வாய்ப்பு உள்ளது.
வேறு யார் பெயருக்காவது, உயில் எழுதி வைத்திருந்தால், அவர்களும் உரிமை கோர வாய்ப்புள்ளது. உயில் உள்ளதா; ஜெ., அண்ணன் குடும்பத்தினர் உரிமை கோருகின்றனரா என்பதை அறிந்த பின்னரே, நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து, அரசு முடிவு செய்ய முடியும்.
கையெழுத்து இயக்கம் துவக்கம்!
சென்னை, போயஸ் கார்டனில், ஜெ., வசித்த வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி சார்பில், கையெழுத்து இயக்கம் துவக்கப் பட்டுள்ளது. முதல்வர் பன்னீர் செல்வம் வீட்டில், அவர் முதல் கையெழுத்திட்டு, அதை துவக்கி வைத்தார். - நமது நிருபர் - தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக