செவ்வாய், 3 ஏப்ரல், 2018

பொய் செய்தி வெளியிடும் ஊடகங்களின் உரிமம் ரத்து என்ற அறிவிப்பை திரும்ப பெற்றது அரசு ...

tamilthehindu : பொய் செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களின்
அங்கீகாரத்தை செய்யும் உத்தரவை திரும்பப் பெற பிரதமர் மோடி
உத்தரவிட்டுள்ளார். ஊடக சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.
பொய் செய்திகளை பரப்பும் பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்தார். சமூக வலைதளங்கள் மூலம் போலியான செய்திகளை பரவச் செய்வதாலும், சில பத்திரிகைகள், பத்திரிகையாளர்களும், தங்களுக்கு வேண்டாதவர்கள் பற்றி தவறான செய்திகளைப் பரப்பி விடுவதாலும் இத்தகைய நடவடிக்கை அவசியம் என அவர் தெரிவித்திருந்தார்.
மக்களின் பொழுதுபோக்குகள், விருப்பங்களை தேர்வு செய்து அதற்கு ஏற்றவகையில் தவறான செய்திகள் வெளியிடப்படுவதாகவும், அதற்கான விதிகள் விரைவில் வகுக்கப்பட உள்ளதாகவும் கூறியிருந்தார். பாஜக தலைவர்கள் குடித்து கூத்தாடும் இந்த படங்கள் பொய்யானவை அல்ல ...கண்டு மகிழுங்கள்

விதிகளை மீறும் செயல்படும் பத்திரிகையாளர்கள் ஒரு முறை விதிமீறினால் 6 மாத தடை, இரண்டு முறை என்றால் 1 ஆண்டு தடை, 3வது முறை விதிமீறயது கண்டுபிடிக்கப்பட்டால் நிரந்தரமாக அங்கீகாரம் தடை செய்யவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்காக தனியாக ஒரு ஆணையம் உருவாக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
இந்த விவகாரத்தில் அரசியல் தரப்பிலும், பத்திரிகையாளர்கள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பொய் செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம், ஆனால், அதற்கான விதிமுறை ஏதுமில்லாத சூழலில் இதே புகாரைக் கூறி நடுநிலையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக அமைந்து விடும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் எச்சரித்திருந்தார்.
இதுபோலவே மத்திய அரசின் இந்த முயற்சி, ஊடகங்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையாக அமைந்து விடும் என பத்திரிகையாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து இந்த உத்தரவை திரும்பப் பெற பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த விஷயத்தில் இந்திய பிரஸ் கவுன்சில் மட்டுமே நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளாளர்.

கருத்துகள் இல்லை: