திங்கள், 30 ஏப்ரல், 2018

பாஜக / ஆர்.எஸ்.எஸ் கும்பல்களின் வாட்சாப் மூலம் மட்டுமே வெளியுலகை பார்க்கும் முட்டாள்தனம்

Swathi K : 2014 தேர்தலில் ஐ.டி துறையில் மோடிக்கு ஆதரவளித்த​ கூட்டம்
இன்றும் அப்படியே தான் இருக்கிறது. 2019 தேர்தல் நெருங்க​ நெருங்க​ ஒவ்வொருவரின் அடிமனதிலும் இருக்கும் மத​ ஜாதி வெறி அப்பட்டமாய் வெளியே வருகிறது.
மோடியும் பிஜேபியும் காட்டிய​ வளர்ச்சி என்பது பொய். அது போல் இவர்கள் வளர்ச்சிக்காக​ மோடியையும் பிஜேபியையும் ஆதரித்தார்கள் என்பதுவும் பொய். இவர்கள் தங்கள் உள்மனதில் இருக்கும் சாதி மற்றும் மத​ வன்மம் காரணமாகவே
பிஜேபியையும் மோடியையும் ஆதரித்தார்கள் என்பதுவே உண்மை.
பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பல் போடும் மீமீஸ்களை கொண்டு தான் அரசியல் மற்றும் பொது அறிவு விஷயங்களை இவர்கள் பெறுவதால் பிஜேபி மிக​ எளிதாக​ தன் விஷத்தை இவர்கள் மீது மேலும் மேலும் செலுத்துகிறது.
பிஜேபியால் விஷம் ஏறப்பெற்ற​ இவர்களின் பாசிசம் அதிகரித்து கொண்டே செல்கிறது. திரிபுரா முதல்வருக்கு பக்தர்களாக​ மாறும் அளவிற்கு இவர்களின் பாசிச​ வெறி இருக்கிறது.
சில​ தினங்களுக்கு முன் கர்நாடகாவை சேர்ந்த​ ஐ.டி ஊழியர் ஒருவரிடம் யாருக்கு ஒட்டு போடுவாய் என்றேன், அவர் பிஜேபிக்கு தான் போடுவேன் என்றார், என்ன காரணம் என்று கேட்டேன், அதற்கு அவர் ஒர் மீமீஸை என்னிடம் காட்டினார், அது ராகுல்காந்தி இந்துக்களுக்கு எதிராக​ பேசியதாக​ ஒர் மீமீஸ். இது ஆர்.எஸ்.எஸ் கும்பல் போட்ட​ பொய் மீமீஸ்.
ஆனால் இதனை உண்மை என்று நம்பி பிஜேபி தூண்டி விட்ட​ மதவெறியை தன் மனதில் ஏற்றியிருக்கிறார். இந்த செய்தி பொய் என்பதை நான் அவரிடம் ஆதரப்பூர்வமாக​ காட்டினாலும், அவர் பிஜேபி போட்ட​ வேறு பல​ பொய்யான மீமீஸ்களை காட்டி கொண்டு "ராகுல்காந்தியும் சித்தராமைய்யாவும் இந்துக்களுக்கு எதிராக​ இருக்கிறார்கள்" என்று கூறிகொண்டே இருந்தார்.
பிஜேபி இவர்களிடம் புகுத்திய​​ சாதி மற்றும் மத​ பாசிச​ வெறி இவர்களை என்றுமே பிஜேபியின் ஆதரவாளர்களாகத் தான் வைத்திருக்கும்.

கருத்துகள் இல்லை: