வெள்ளி, 4 மே, 2018

ராமநாதபுரத்தில் தலித் வீட்டில் நிர்மலா சீதாராமனுக்கு வாழை இலை ..

Troll Trousers 2.0 :இப்டியெல்லாம் மானங்கெட்டு போய்தான் இந்த தமிழிசை சௌந்தரராஜன் வாழனுமா? பாப்பாத்திக்கு மட்டும் வாழை இழை... தமிழிசைக்கு சில்வர் தட்டு....
Nirmala Sitharaman Visits Dalit Houses tamil.oneindia.com/authors/mathi. ; ராமநாதபுரம்: பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென தமிழகத்தில் தலித் கிராமங்களில் தங்கி, சாப்பிட்டு மத்திய அரசு நலத் திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. தமிழகத்தில் பிறந்தவராக இருந்தாலும் ஆந்திராவில் செட்டிலானவர் நிர்மலா சீதாராமன். கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் காவிரி நதிநீர் பிரச்சனையில் தன்னை ஒரு கன்னடராகவே நினைத்துக் கொண்டு கர்நாடகா எம்.பி.க்களுடன் இணைந்து செயல்படுகிறவர். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான கேள்விகளுக்கு அலட்சியமாக பதில் சொன்னதால் தமிழகத்தில் நேற்று கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டவர் நிர்மலா.
இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்தார். பின்னர் கலையூர் தலித் கிராமத்தில் இரவு தங்கினார்.

பாஜகவின் மாநில செயலர் பால கணபதி வீட்டில் இரவு உணவு அருந்தினார். இன்று விருதுநகர் மாவடம் பாஜகவின் எஸ்சி மோர்ச்சாவைச் சேர்ந்த முருகன் வீட்டில் மதிய உணவு அருந்தினார்.
இவை தொடர்பான புகைப்படங்களை தமது ட்விட்டர் பக்கத்தில் இடைவிடாமல் நிர்மலா சீதாராமன் பதிவிட்டு வருகிறார். நிர்மலா சீதாராமனின் இந்த திடீர் டேரா ஏற்கனவே காற்றில் பரவும் பல செய்திகளை உறுதி செய்வதாகவே இருக்கிறது

கருத்துகள் இல்லை: