வியாழன், 6 அக்டோபர், 2011

மானங்கெட்ட மாவை அமிரை கொலை செய்தவர்கள் யார்?

தற்போதைய இளந்தலைமுனருக்கு அமிர்தலிங்கம் என்றால் யாரென்றே தெரியாது. அவரது பங்களிப்பு என்ன என்பது பற்றியும் தெரியாது. ஆனால் அவர் இறந்து விட்டார் என்பது மட்டும் தெரியும். ஆனால் அவர் எவ்வாறு இறந்தார்:? இயற்கை மரணமா? அல்லது புலிகளிடம் மண்டியிட்டிருந்த காலத்தில ஆனந்தசங்கரியண்ண கூறுவது போல விபத்தா? அல்லது கொலையா? உண்மையில் நடந்தது என்ன என்பது தெரிந்திருந்தும் மறைக்கின்றார்கள் தமிழர்கள் தலைவர்கள் என தம்மைக் கூறிக்கொள்ளும் கருங்காலிகள். 
 யாழ்ப்பாணத்திலே நடந்த அமிரின் நினைவுக் கூட்டத்தில் சி.வி.கே சிவஞானம் உட்பட பலர் பேசியிருக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட அமிர் அநியாயமாக கொல்லப்பட்டர் என்பது பற்றி வாய் திறக்கவில்லை. இவர்கள்தான் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்களாம் சீ.. ஆ..
சரி இவர்களை விடுவோம். அமிர்தலிங்கத்தினால் வளர்த்து விடப்பட்ட அமிரின் குணாதியங்களில் எதுவுமேயற்ற முதுகெலும்பற்ற பிராணிதான் மாவை. இன்றைக்கு இந்த மாவை தனது பிள்ளைகளை வெளிநாட்டிலே விட்டு கோடிக்கணக்காக செலவளித்து படிப்பிக்கிறார் என்றால் அது அண்ணன் அமிர் போட்ட பிச்சை. இன்றைக்கு கொழும்பிலே குளுகுளு அறையிலே மாவை சொகுசு வாழ்க்கை வாழ்கின்றார் என்றால் அது அண்ணன் அமிர் போட்ட பிச்சை. இன்றைக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சொகுசு வாகனத்திலே மாவை வலம் வருகின்றார் என்றால் அதுவும் அண்ணன் அமிர்; போட்ட பிச்சை. இப்படியெல்லாம் செய்த அமிருக்கு மாவை செய்த கைமாறு என்ன? அமிருக்கு உண்மையில் நடந்தது என்ன?
மாவையின் முன்னிலையில் அமிர் அவர்கள் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார். புலிகள் அமிரின் வாசஸ்தலத்திற்கு எதுவித பிரச்சினையுமின்றி வருவதற்கு மாவையே பின்னணியில் இருந்தார் என்பதற்கு எதுவித ஆதாரமுமில்லை எனினும், ஒன்றுமட்டும் உண்மை. அமிர் அவர்கள் இரத்தம் பீறிட நெஞ்சைப் பொத்திக் கொண்டு கீழே சரிகிறார். யோகேஸ்வரன் விழுகின்றார். ஆனால் மாவை மட்டும் தப்பியது எவ்வாறு? அமிரின் உண்மையான விசுவாசிகள் மாவையை மதிக்காமல் கணக்கெடுக்காமல் இருப்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. தமிழரசுக் கட்சியுக்குள்ளேயே பலர் மாவையை வெறுப்பதற்கு இவைகள் மட்டும் காரணமல்ல. அமிர் அவர்களின் மீது சூடு விழுந்து இரத்தம் இரத்தம் பீறீட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் “மாவை கொஞ்சத் தண்ணீர் தா” என்று கெஞ்சியிருக்கின்றார் உயிர் பிரியும் நேரத்தில்.
அமிர் அவர்களை காப்பாற்ற வேண்டுமென நன்றிகெட்ட மாவை நினைத்திருந்தால்… தண்ணீரைக் கொடுத்து உரியவர்களை உடனடியாக அழைத்திருக்க வேண்டும். ஆனால் மாவை செய்தது என்ன? தண்ணீர் தண்ணீர் என அமிர் அவர்கள் கதறிய போது தன்னைக் காப்பாற்ற மேலே ஒடியது தான். மன்னர் விடுதி அறையிலே மாவை அமிர் அவர்களுக்கு செய்த துரோகத்தை மறந்து விடுவோம். கண்ணுக்கு முன்னாள் கடைசி நேரத்தில் தண்ணீர் கூட கொடுக்காமல் அமிரை சாகடித்ததை தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.
நன்றிகெட்ட மாiவே உன் கண்ணுக்கு முன்னால் அமிரின் உடம்பிலிருந்து இரத்தம் பீறிட்டு ஒடியதே அது எந்த வகையைச் சேர்ந்த இரத்தம்? அது தமிழ் இரத்தமா? அல்லது சிங்கள இரத்தமா? தமிழ் இரத்தமென்றால் இந்த மனிதனை கொன்றவர்களுடன் தானே பாராளுமன்ற கதிரைக்காக அவர்களின் காலில் விழுந்து மண்டியிட்டாய். சிங்கள இரத்தமென்றால்… கொலைஞர் கூறுவது போல் நீயும் அண்ணன் அமிரின் கொலையை நியாயப்படுத்துகிறா யா?.
மானங்கெட்ட… முதுகெலும்பற்ற….. உனக்கு மாலை ஒரு கேடா? நெஞ்சில் உரமிருந்தால் நேர்மைத் திறன் இருந்தால் அமிரை கொலை செய்தவர்கள் யார்? அவர் கொலை செய்யப்பட வேண்டியவரா? உனது உடம்பிலே ஒடுவது தமிழ் இரத்தமாக இருந்தால் இந்தக் கேள்விக்களுக்கான பதிலை பகிரங்கமாக தெரியப்படுத்து.

கருத்துகள் இல்லை: