செவ்வாய், 4 அக்டோபர், 2011

குஷ்பு திருச்சியில் கிராமம் கிராமமாக பிரச்சாரம்!


திருச்சி: அக்டோபர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் திருச்சி மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் கே என் நேருவை ஆதரித்து கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்கிறார் நடிகை குஷ்பு.

இந்தத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்ஜோதி, தி.மு.க. வேட்பாளர் கே.என். நேரு ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், தி.மு.க. பிரமுகர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

தி.மு.க. வேட்பாளர் கே.என். நேருவை ஆதரித்து நடிகை குஷ்பு நாளையும், நாளை மறுநாளும் கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்கிறார்.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குஷ்பு பிரச்சாரம் செய்யும் இடங்கள்:

5-ந்தேதி மாலை 4 மணி: பஞ்சப்பூர், ராமச்சந்திரா நகர், 5 மணி: கிராப்பட்டி, 5.30: கருமண்டபம், பிரார்டியூர், 6 மணி: பெரிய மிளகுபாறை, பஞ்சு கிடங்கு, பீமாநகர், நியூராஜா காலனி, இரவு 7 மணி: செடல் மாரியம்மன் கோவில், 7.15 மணி: மார்கிஸ் பேட்டை, கூனியூர், மேலப் புதூர், இரவு 8 மணி: ஒத்தக் கடை, 8.30 மணி: புத்தூர் நால்ரோடு, 9 மணி:- சீனிவாச நகர், இரவு 9.30 மணி: உய்யகொண்டான் திருமலை. 6-ந்தேதி மாலை 4 மணி:-

அரவானூர், பாண்டமங்கலம், மாலை 4.30 மணி: நாச்சியார் கோவில், பாக்குப்பேட்டை, 5 மணி: மின்னப்பன் தெரு, நவாப்தோட்டம், 5.30 மணி: திருத்தாந்தோணி ரோடு, சீரைக்கொல்லை, சோழராஜ புரம், 6 மணி: தில்லை நகர், வடவூர், ராஜ்மானியபுரம், இரவு 7 மணி: வாமடம், அண்ணாநகர், 7.30 மணி: ஆழ்வார் தோப்பு, 8 மணி தென்னூர் மந்தை, பட்டாபி ராமன் தெரு, இரவு 8.30 மணி குடித்தெரு, காந்திபுரம். நடிகர் வாகை சந்திரசேகர் இன்று திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேருவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

மாலை 4 மணிக்கு அரவானூரில் பிரசாரத்தை தொடங்கி இரவு 9 மணிக்கு சண்முகாநகரில் பிரசாரத்தை முடிக்கிறார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி 10-ந்தேதி திருச்சியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

கருத்துகள் இல்லை: