வெள்ளி, 16 ஜூலை, 2010

பாமக, மதிமுக அங்கீகாரம் ரத்தாகிறது-தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: பாமக, மதிமுக உள்ளிட்ட 7 கட்சிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக வருகிற 21ம் தேதிக்குள் இவர்கள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைக்கு இவர்களின் மாநிலக் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனத் தெரிகிறது.

பாமக, மதிமுக தவிர ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி கட்சி, திரினமூல் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, அருணாச்சல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

2009ல் நடந்த லோக்சபா தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்குத் தேவையான வாக்குகளை இவை பெறத் தவறியதால் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இதேபோல சமீபத்தில் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிக்கு ஏன் உங்களது கட்சிக்கான தேசியக் கட்சி அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது என்று கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது நினைவிருக்கலாம்.

தமிழக கட்சிகளைப் பொறுத்தமட்டில், புதுச்சேரியில் பாமகவுக்கு அங்கீகாரம் பறிபோகும் எனத் தெரிகிறது. அதேசமயம், தமிழகத்தில் அதன் அங்கீகாரம் தப்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், மதிமுகவுக்கு முழுமையாக அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்சியின் ஓட்டு சதவீதம் தேர்தலுக்குத் தேர்தல் கரைந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்தவர்: கடம்பன்
பதிவு செய்தது: 16 Jul 2010 6:40 pm
தாழ்த்தபட்ட அன்புமணியின் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் அயராது உழைக்கும், தாழ்த்தபட்ட அன்புமணியின் முன்னேற்றத்திற்காக ஆறு மாதம் வேட்டியையும் மீத ஆறு மாதம் சேலையையும் துவைத்து பாடுபடும் மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி ராமதாசு அய்யா அவர்கள் உள்ளவரை பாமகா வை யாராலும் அசைக்க இயலாது.


பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 16 Jul 2010 6:22 pm
இந்த மரம் வெட்டி நாய்களை அன்றே ------- இருந்தால் தமிழ்நாடு உருபட்டிருக்கும்

கருத்துகள் இல்லை: