சனி, 17 ஜூலை, 2010

நள்ளிரவில் செக்ஸ் டார்ச்சர்: நடிகை திவ்யா வேதனை

குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம்  உட்பட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார் நடிகை திவ்யா.    கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தற்போது காதல் டூ கல்யாணம் தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இவரது செல்போனுக்கு அடிக்கடி ஒரு மர்ம நபர் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.  நள்ளிரவில் செல்போனில் தொடர்புகொண்டு ஆபாசமாகவும் பேசியுள்ளார்.
இது குறித்து நடிகை திவ்யா அவரது டிவிட்டர் பிளாக்கில் வேதனையை தெரிவித்துள்ளார்.
‘’மர்ம நபர் ஒருவர் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணிலிருந்து கண்ட நேரத்தில் அடிக்கடி பேசி தொல்லை தருகிறார்.

நள்ளிரவு நேரங்களில் அழைத்து பேசுவதுடன்,  முட்டாள்தனமான ஆபாச எஸ்.எம்.எஸ்கள் அனுப்பி தொந்தரவு செய்கிறார்.
அந்த நபரை தொடர்பு கொண்டு அவரது தொல்லையை தவிர்க்க வழி செய்ய வேண்டும்.  இது குறித்து போலீஸிடம் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளேன்’’  என்று தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே நடிகர்,நடிகைகள் தங்கள் செல்போனில் பதிவு செய்து வைத்திருக்கும் நபர்களிடம் மட்டுமே பேசுவது வழக்கம்.  தெரியாத எண்கள் வரும் போது பெரும்பாலும் தவிர்த்து விடுகின்றனர்.

திவ்யா போன்ற ஒரு சிலர் மட்டுமே எல்லா அழைப்புகளுக்கும் பேசுவது உண்டு.   அதனால்தான் அவர் இப்படி ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை: